- அ.சீ.லாவண்யா
புதுடெல்லி: புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கான ஊதியம் தாமதமாக வழங்கப்படும் சூழ்நிலையில், அதற்கான இழப்பீடும் சேர்த்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வேலை செய்து முடித்த பிறகு ஊதியம் தாமதமாகக் கிடைப்பதால் ஏற்படும் பொருளாதார சிரமங்களை குறைக்கும் நோக்கில், இழப்பீடு வழங்கும் நடைமுறை தெளிவாக செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

அதே நேரத்தில், 125 நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக வேளாண் சாகுபடி தொடர்பான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் வருமானம் மற்றும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
ஊதியம் காலத்துக்குள், இழப்பீட்டுடன் கிடைக்கும் உறுதி மற்றும் வேளாண் பணிகளுக்கான முன்னுரிமை ஆகியவை, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் புதிய அத்தியாயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(அ.சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து
நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் எதிரொலி.. பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்
என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்
நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்
இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
அனாதைகள் யாருடைய குழந்தைகள்???
நன்றொன்று உண்டென்று
சிறிதாய் இருந்தது பெரிதாகி விட்டது.. வீடு காலி!
பணத்தை வென்ற பாசம்!
{{comments.comment}}