சென்னை: இந்திய விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடைபெறுவதால் விமான நிலையம் பிற்பகல் 1.45 முதல் 3.15 வரை மூடப்படும் என சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் வருகின்ற 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் ஏர் ஷேச நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ளது. இதற்காக இன்று பிற்பகல் சென்னை விமான நிலையம் 1.45 முதல் 3.15 மணி வரை ஒன்றரை மணி நேரம் மூடப்படுகிறது. இதன் காரணமாக 25 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை:

இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 8ம் தேதி வரை சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு சில பயண அறிவிப்பை வெளியிடுகிறது. விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது .
இதன் காரணமாக, சென்னை விமான நிலைய வான் தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை பல்வேறு இடைவேளைகளில் மூடப்படும் விரிவான அட்டவணையை பகிர்ந்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1ம் தேதி 13.45 முதல் 15.15 வரை மூடப்படும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 2,3,5,6,7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் விமான நிலையம் பல்வேறு நேரங்களில் மூடப்படும். விமானப் பயண அட்டவணைகளை சரிபார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் அவர்களின் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது, பயணிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் இந்திய விமான படையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. பயணிகள் தங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
{{comments.comment}}