விமானப்படையின் சாகச நிகழ்ச்சி.. சென்னை விமான நிலையம்.. பிற்பகல் 1.45 முதல் 3.15 வரை மூடல்!

Oct 01, 2024,12:29 PM IST

சென்னை:   இந்திய விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடைபெறுவதால் விமான நிலையம் பிற்பகல் 1.45 முதல் 3.15 வரை மூடப்படும் என சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.


சென்னை மெரினா கடற்கரையில் வருகின்ற 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் ஏர் ஷேச நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ளது. இதற்காக இன்று பிற்பகல் சென்னை விமான நிலையம் 1.45 முதல் 3.15 மணி வரை ஒன்றரை மணி நேரம் மூடப்படுகிறது. இதன் காரணமாக 25 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை:




இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று  முதல் வரும் 8ம் தேதி வரை சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு சில பயண அறிவிப்பை வெளியிடுகிறது. விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது .


இதன் காரணமாக, சென்னை விமான நிலைய வான் தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை பல்வேறு இடைவேளைகளில் மூடப்படும் விரிவான அட்டவணையை பகிர்ந்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1ம் தேதி 13.45 முதல் 15.15 வரை மூடப்படும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 2,3,5,6,7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் விமான நிலையம் பல்வேறு நேரங்களில் மூடப்படும். விமானப் பயண அட்டவணைகளை சரிபார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் அவர்களின் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது, பயணிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் இந்திய விமான படையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. பயணிகள் தங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

news

என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா

news

சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்

news

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

news

மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)

news

பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

news

மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?

அதிகம் பார்க்கும் செய்திகள்