சென்னை: இந்திய விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடைபெறுவதால் விமான நிலையம் பிற்பகல் 1.45 முதல் 3.15 வரை மூடப்படும் என சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் வருகின்ற 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் ஏர் ஷேச நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ளது. இதற்காக இன்று பிற்பகல் சென்னை விமான நிலையம் 1.45 முதல் 3.15 மணி வரை ஒன்றரை மணி நேரம் மூடப்படுகிறது. இதன் காரணமாக 25 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை:

இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 8ம் தேதி வரை சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு சில பயண அறிவிப்பை வெளியிடுகிறது. விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது .
இதன் காரணமாக, சென்னை விமான நிலைய வான் தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை பல்வேறு இடைவேளைகளில் மூடப்படும் விரிவான அட்டவணையை பகிர்ந்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1ம் தேதி 13.45 முதல் 15.15 வரை மூடப்படும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 2,3,5,6,7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் விமான நிலையம் பல்வேறு நேரங்களில் மூடப்படும். விமானப் பயண அட்டவணைகளை சரிபார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் அவர்களின் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது, பயணிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் இந்திய விமான படையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. பயணிகள் தங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6
ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!
டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு
{{comments.comment}}