சென்னை: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 12ம் தேதி முதல் கன மழை பெய்யத் தொடங்கப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றவுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இன்று அது உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சற்று தாமதம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு வார காலத்துக்கு தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், இன்று தமிழ்நாட்டுக்கு மழைக்கு பிரேக். 12ம் தேதி முதல் பருவ மழை மீண்டும் சூடு பிடிக்கும். குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யத் தொடங்கும். பிறகு தமிழ்நாட்டின் இதர பகுதிகளுக்கு அது பரவும்.12ம் தேதி முதல் சூப்பரான மழை வாரம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
சென்னையில் கன மழை மீண்டும் வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் உஷாராகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கடந்த முறை மழை அதிகம் நின்ற பகுதிகளில் இந்த முறை முன்னேற்பாடுகள் இப்போதே செய்யப்பட்டு வருகின்றன.
மழை முன்னேற்பாடுகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், கடந்த காலத்தைப் போலவே இப்போதும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிக்க அனைவரும் தயாராக இருக்கிறோம். மக்களும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
{{comments.comment}}