சென்னை: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 12ம் தேதி முதல் கன மழை பெய்யத் தொடங்கப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றவுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இன்று அது உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சற்று தாமதம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு வார காலத்துக்கு தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், இன்று தமிழ்நாட்டுக்கு மழைக்கு பிரேக். 12ம் தேதி முதல் பருவ மழை மீண்டும் சூடு பிடிக்கும். குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யத் தொடங்கும். பிறகு தமிழ்நாட்டின் இதர பகுதிகளுக்கு அது பரவும்.12ம் தேதி முதல் சூப்பரான மழை வாரம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
சென்னையில் கன மழை மீண்டும் வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் உஷாராகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கடந்த முறை மழை அதிகம் நின்ற பகுதிகளில் இந்த முறை முன்னேற்பாடுகள் இப்போதே செய்யப்பட்டு வருகின்றன.
மழை முன்னேற்பாடுகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், கடந்த காலத்தைப் போலவே இப்போதும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிக்க அனைவரும் தயாராக இருக்கிறோம். மக்களும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}