சென்னை: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 12ம் தேதி முதல் கன மழை பெய்யத் தொடங்கப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றவுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இன்று அது உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சற்று தாமதம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு வார காலத்துக்கு தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், இன்று தமிழ்நாட்டுக்கு மழைக்கு பிரேக். 12ம் தேதி முதல் பருவ மழை மீண்டும் சூடு பிடிக்கும். குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யத் தொடங்கும். பிறகு தமிழ்நாட்டின் இதர பகுதிகளுக்கு அது பரவும்.12ம் தேதி முதல் சூப்பரான மழை வாரம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.

சென்னையில் கன மழை மீண்டும் வரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் உஷாராகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கடந்த முறை மழை அதிகம் நின்ற பகுதிகளில் இந்த முறை முன்னேற்பாடுகள் இப்போதே செய்யப்பட்டு வருகின்றன.
மழை முன்னேற்பாடுகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், கடந்த காலத்தைப் போலவே இப்போதும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிக்க அனைவரும் தயாராக இருக்கிறோம். மக்களும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவ., 29ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் தகவல்!
அதிர வைத்த தேஜஸ் போர் விமான விபத்து.. நடந்த தவறு என்ன.. தீவிரமாக ஆராயும் நிபுணர்கள்
சென்னையில்.. தக்காளி விக்கிற விலைக்கு.. சட்னி அரைக்க முடியாது போலயே.. கிலோ ரூ. 80!
ரஜினிகாந்த்தை திருப்திப்படுத்தப் போவது யார்.. தலைவர் 173 எதிர்காலம் என்னாகும்?
திருவண்ணாமலை தீபத் திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
SIR விழிப்புணர்வு.. ஆவின் நிறுவனத்தின் சூப்பர் ஐடியா.. பால் பாக்கெட்டில் அபாரம்!
Gentleman driver of the Year .. வெனிஸ் நகரில் விருது வென்ற அஜீத்குமார்... ஷாலினி பெருமிதம்
Today Gold Silver Rate:வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சரவனுக்கு ரூ.880 குறைவு...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு.. ஜனாதிபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்
{{comments.comment}}