சென்னை வரும் வெளியூர் பஸ்கள்...இனி இந்த பக்கம் தான் வரும்:  அரசு உத்தரவு

Feb 17, 2023,03:54 PM IST
சென்னை : வெளியூரில் இருந்து சென்னை வரும் பஸ்கள் செல்லும் வழி தடம், கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பினை தமிழக போக்குவரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.



போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவில், வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு பஸ்கள் பகலில் இனி தாம்பரம் வழியாக செல்லலாம். அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வரும் அரசு பஸ்கள் தாம்பரம் வழியாக இயக்கப்படும். 



தாம்பரம் பஸ் ஸ்டாப்பிற்கு இடது புறமாக நிறுத்தி பணிகளை இறக்கிவிட வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பஸ்கள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆகியோருக்கு போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்பு இப்படித்தான் பஸ்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. அதை பின்னர் மாற்றினார்கள். இப்போது திரும்பவும் அதேபோன்று மாற்றம் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

டி20 உலகக்கோப்பையில் திருப்பம்.. ‘புறக்கணிப்பு’ முடிவிலிருந்து பாகிஸ்தான் யூ-டர்ன்?

news

எழுந்தது முதல்.. இரவில் படுக்கையில் சாயும் வரை.. எங்கெங்கும் ஏஐ..!

news

Propse Day: காதலுக்கு முன்பு.. அன்பை வெளிப்படுத்துங்க.. அதை உணர்த்துங்க!

news

பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?

news

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

news

தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

news

ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி

news

கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?

news

ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?

அதிகம் பார்க்கும் செய்திகள்