சென்னைவாசிகளே.. மாட்டை உள்ளேயே பத்திரமா கட்டி வைங்க.. அபராதத்தை ஏத்திருச்சு மாநகராட்சி!

Jul 30, 2024,03:13 PM IST

சென்னை:   சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்தி சென்னை மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


சென்னை சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என மாநகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாடுகள் அதிகளவில் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பல்வேறு விபத்துகளும் நடைபெறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டும் இன்றி சாலைகளில் செல்லும் சிறுவர்கள், பெரியோர்களை மாடுகள் முட்டி தாக்குகின்றன.




மாடு முட்டி சிறுமி படுகாயம், மூதாட்டி காயம் போன்ற செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்படுவதும் உண்டு. முன்னர் எல்லாம் சாலைகளில் திரியும் மாடுகளை அதிகாரிகள் பிடித்தால் 5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.


தற்போது இந்த நிலை மாறி சென்னை சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் முதல் முறைப்படிப்பட்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை 10,000 அறிவிக்கப்பட்டுள்ளது. அதே மாதிரி இரண்டாவது முறை பிடிக்கப்படும் போது மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை 15,000 என்றும், மேலும் பராமரிப்பு செலவுக்காக மாடு ஒன்றுக்கு ஆயிரம் என கூடுதலாக வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித் தெரியும் மாடுகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்