நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

Nov 09, 2024,04:14 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.


தமிழகத்தில் பருவமழை தொடங்கி ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அத்துடன் தமிழகமும் மழையினால் குளுமை அடைந்துள்ளது. காலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.




இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், சென்னையில் வரும் 14, 15ம் தேதிகளுக்குப் பிறகு கனமழை இருக்கும் என வானிலை மையம் கூறியிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார், துணை முதல்வரும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அமைச்சர்களும் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அந்தப் பகுதிகளில் எல்லாம் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.


கடந்த மாதம் பெய்த மழையின் போது சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு மேலாக எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வரக்கூடிய நாட்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


நீர் தேங்கிய பகுதிகளில் மோட்டார் கொண்டு தண்ணீர் குழாய் மூலம் மழை நீர் வடிகாலுக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார் மேயர் பிரியா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!

news

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!

news

கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !

news

புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!

news

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்

news

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!

news

ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!

news

தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்