ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!

Oct 10, 2024,06:01 PM IST

சென்னை:  ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றங்களை அறிவித்துள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம்.


நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகியவை நாளை கொண்டாடப்படவுள்ளன. அடுத்த நாள் அதாவது அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் தங்களது ஊர்களுக்குச்  சென்றவண்ணம் உள்ளனர்.


மக்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. கிளாம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு சிறப்புப் பேருந்துகளுக்கும் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமும் பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.




10ம் தேதி, இன்று, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பீக் அவரின்போது அதாவது காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் ஒவ்வொரு 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில்  7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல இரவு 10 மணி முதல் 11 மணி வரை வழக்கமாக 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதற்குப் பதிலாக இன்று 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆயுத பூஜை தினத்தில்


ஆயுத பூஜை தினமான நாளை, சனிக்கிழமை அட்டவணை அமல்படுத்தப்படும். அதன்படி காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் ஒவ்வொரு 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.


5 மணி முதல் 8 மணி வரை, 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் 8 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.


இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்