- மஞ்சுளா தேவி
சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரூ. 5 கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற சலுகை, வரும் டிசம்பர் 17ஆம் தேதிக்கும் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை புயல் மழையாக இருக்கும் என்பதால் பயணிகள் வருகை குறைவாக இருககும் என்ற எதிர்பார்ப்பால் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) நாளை ஒரு நாள் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ இரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக நாளை (03.12.2023) கனமழை, புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை (03.12.2023) பயணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.
மெட்ரோ பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த பிரத்யேக கட்டணத்தில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு ரூ.5 என்ற பயணக்கட்டணத்தில் வருகின்ற 17.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் பயணிகள் பயணிக்கலாம்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளது.
தற்போது சென்னை அருகே வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை மறு நாள் புயலாக உருவாகிறது. தமிழக அரசு புயல் எச்சரிக்கை குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கியும், பாதுகாப்பு குறித்தும் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Exit Poll: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்.. தவெகவுக்கு 3வது இடம்.. எக்ஸிட் போல்
அதிமுகவுக்கு அதிக சீட் கிடைக்கும்.. 2 எக்ஸிட் போல்களின் முடிவுகள் கூறுவது என்ன?
Exit Poll: தவெகவுக்கு 98 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் - ஆக்ஸிஸ் மை இந்தியா (இந்தியா டுடே)
Exit Poll சொல்வது என்ன.. புதிய சக்தியாக உருவெடுக்குமா தவெக.. விஜயகாந்த்தை மிஞ்சுவாரா விஜய்?
Exit Poll கலாட்டாக்கள்: "நாலு மே வரட்டும்".. முடியலையே.. முடியலையேடா!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவு
Tamil Nadu: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்.. மாணவர் சேர்க்கை 1 லட்சத்தைத் தாண்டி அசத்தல்!
5 மாநில சட்டசபை தேர்தல் 2026: இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
{{comments.comment}}