சென்னை: பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசியதற்காகவும், திமுக எம்.பி கனிமொழியை அவதூறாகப் பேசியதாகவும் எம்.பி எம்எல்ஏக்கள் கோர்ட்டில் தொடரப்பட்ட 2 வழக்குகளில் பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான எச். ராஜா குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும் தலா ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி கனிமொழிக்கு எதிராக தனது எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்கிடமான பதிவைப் போட்டிருந்தார் எச். ராஜா. மேலும் அதே ஆண்டு மார்ச் 6ம் தேதி தந்தை பெரியார் சிலைகளை உடைப்பேன் என்றும் பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் எச். ராஜா.

ஆனால் அங்கு அவரது மனு தள்ளுபடியானது. மேலும் வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும் பல்வேறு ஊர்களில் இதுதொடர்பாக பதியப்பட்ட வழக்குகளை மூன்றாக பிரித்து ஒரு வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கும், 2 வழக்குகளை சென்னையில் உள்ள எம்.பி. எம்எல்ஏக்கள் கோர்ட்டுக்கும் மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
இதில் சென்னை வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று இரு வழக்குகளிலும் தலா 6 மாத சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 22, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
மார்கழி 07ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 07 வரிகள்
Christmas: தவெகவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. மாமல்லபுரத்தில் இன்று விஜய் பேச்சு!
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
{{comments.comment}}