ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்னையை வச்சு செய்த கன மழை.. விட்டு விட்டு பெய் ராசா.. தாங்காது!

Nov 26, 2024,02:03 PM IST

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக் கடலோர மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னையில் நகர்ப் பகுதியிலும், புறநகர்களிலும் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.


தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டு வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னைக்கு 27ஆம் தேதி கன மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அதிகாலை முதலிலேயே சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், முடிச்சூர், பாரிமுனை, எம்ஜிஆர் நகர், மந்த வெளி, பட்டினப்பாக்கம், மீனம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.




திடீரென பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்திற்கு ஆங்காங்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் செல்பவர்கள், ஸ்கூலுக்கு செல்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். மேலும் காலை முதல் சென்னையில் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதுடன் மழையும் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர்.


இருந்தாலும் காற்று, இடி, மின்னல் இல்லாமல் வெறும் மழை மட்டுமே பெய்து வருகிறது. பெரு மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது. சாலைகளிலும் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. மழை நின்றதும் இது வடியத் தொடங்கும் என்பதால் மக்கள் கவனமுடன் செல்ல வேண்டியது அவசியம்.


வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. தற்போது இந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு 830 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.


காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  குறிப்பாக  சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் சென்னை கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.


சென்னை உட்பட வடக் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்  தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வங்க கடலில் மே 27ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!

news

அமலாக்கத்துறையின் டாஸ்மாக் ரெய்டுகள்.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.. இடைக்காலத் தடை

news

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ்.. 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

news

தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக: எம்.பி. சு.வெங்கடேசன்

news

தனுஷின் புதிய படத்திற்கு என்ன பெயர் தெரியுமா..?

news

அரபிக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

news

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

கிவி (KIWI) பழத்தில் குவிந்து கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்.. விலையும் ஜாஸ்தி.. பலனும் அதிகம்!

news

ஆர்பிஐ விதிமுறைகளை திரும்பப் பெறுக.. அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்