சென்னை மக்களுக்கு குட் நியூஸ்... மின்சார ரயில் சேவை சீரடைந்தது.. வழக்கம் போல ஓடும் ரயில்கள்

Aug 18, 2024,06:05 PM IST

சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் சேவை, இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக மறுசீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் தாம்பரம்-கடற்கரை, கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கங்களில் செல்லும் மின்சார ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அதோடு வெளியூர்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காமலும் சென்று வந்தன. இதனால் புறநகர்களுக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


மின்சார ரயில் சேவையில் செய்யப்பட்ட இந்த திடீர் மாற்றத்தால் சென்னையில் காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கத்தை விட பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. பலர் சொந்த வாகனங்களிலேயே பயணிக்க துவங்கியதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.




முதலில் ஆகஸ்ட் 14 வரை மட்டுமே மின்சார ரயில் சேவை நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில், பிறகு ஆகஸ்ட் 18 வரை  55 மின்சார ரயில்களின் சேவை நிறத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் 19ம் தேதி முதல் தான் மின்சார ரயில்கள் இயக்கப்படும் செல்லப்பட்டது. சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து விட்டதால், முற்பகலுக்கு மேல் ரயில் சேவை மீண்டும் இயல்பாக தொடங்கியது.


செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

அதிகம் பார்க்கும் செய்திகள்