சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் சேவை, இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக மறுசீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் தாம்பரம்-கடற்கரை, கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கங்களில் செல்லும் மின்சார ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அதோடு வெளியூர்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காமலும் சென்று வந்தன. இதனால் புறநகர்களுக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மின்சார ரயில் சேவையில் செய்யப்பட்ட இந்த திடீர் மாற்றத்தால் சென்னையில் காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கத்தை விட பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. பலர் சொந்த வாகனங்களிலேயே பயணிக்க துவங்கியதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

முதலில் ஆகஸ்ட் 14 வரை மட்டுமே மின்சார ரயில் சேவை நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில், பிறகு ஆகஸ்ட் 18 வரை 55 மின்சார ரயில்களின் சேவை நிறத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் 19ம் தேதி முதல் தான் மின்சார ரயில்கள் இயக்கப்படும் செல்லப்பட்டது. சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து விட்டதால், முற்பகலுக்கு மேல் ரயில் சேவை மீண்டும் இயல்பாக தொடங்கியது.
செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அனைத்து ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}