சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செம்ம வெயில் அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிறது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயில் அதிகரித்து மக்களை வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக வட இந்தியா பகுதிகளில் கடுமையான வெப்பமும் கூடவே வெப்ப அலையும் சேர்ந்து தாக்கி வருகிறது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்டது. இதனால் டெல்லியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் எதிரொலியாக தற்போது வட கடலோர பகுதிகளில் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில்,

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருகிறது. காலை 11 மணிக்கே 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் சுட்டெரித்தது. நுங்கம்பாக்கம் பகுதிகளில் கடல் காற்று வீசியதால், அப்பகுதியில் வெக்கை சற்று தணிந்துள்ளது.
அதேசமயம், மீனம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்தது. இங்கு வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தணியில் 43 டிகிரி செல்சியஸும், வேலூரில் 43 டிகிரி செல்சியஸை தாண்டியும் வெப்பநிலை பதிவாகும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வருகிறது. ஆங்காங்கு மின்வெட்டும் ஏற்படுவதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேர மின்வெட்டு சில பகுதிகளில் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}