சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செம்ம வெயில் அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிறது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயில் அதிகரித்து மக்களை வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக வட இந்தியா பகுதிகளில் கடுமையான வெப்பமும் கூடவே வெப்ப அலையும் சேர்ந்து தாக்கி வருகிறது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்டது. இதனால் டெல்லியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் எதிரொலியாக தற்போது வட கடலோர பகுதிகளில் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில்,

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருகிறது. காலை 11 மணிக்கே 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் சுட்டெரித்தது. நுங்கம்பாக்கம் பகுதிகளில் கடல் காற்று வீசியதால், அப்பகுதியில் வெக்கை சற்று தணிந்துள்ளது.
அதேசமயம், மீனம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்தது. இங்கு வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தணியில் 43 டிகிரி செல்சியஸும், வேலூரில் 43 டிகிரி செல்சியஸை தாண்டியும் வெப்பநிலை பதிவாகும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வருகிறது. ஆங்காங்கு மின்வெட்டும் ஏற்படுவதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேர மின்வெட்டு சில பகுதிகளில் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}