நெல்லை: திருநெல்வேலி டூ சென்னை மற்றும் சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு செப்டம்பர் 23 முதல் தொடங்கியது.
செப்டம்பர் 24ஆம் தேதி இன்று நெல்லை டூ சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக முடிந்துள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது .
முதலில் வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நெல்லைக்கு சென்றது. அதனைத் தொடர்ந்து மறு மார்க்கமாக நெல்லையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டது. வந்தே பாரத் ரயிலின் இலக்காக நிர்ணயித்த நேரத்தை எட்டியதில் ரயில்வே அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளனர். அதேசமயம் வந்தே பாரத் ரயிலில் எப்போது பயணிக்கலாம் என்ற ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் ,திருச்சி திண்டுக்கல் ,மதுரை, விருதுநகர் போன்ற தடங்களில் நின்று பின்னர் நெல்லையை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் சென்றடையும்.
செவ்வாய்க்கிழமை தவிர இதர ஆறு நாட்களும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் இயங்கும்.
நேர அட்டவணை:
வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு கிளம்பி சென்னை எழும்பூரை பிற்பகல் 1.50 மணிக்கு வந்தடையும்.
விருதுகரில் காலை 7.13 மணிக்கு நிற்கும். மதுரை - 7.50, திண்டுக்கல் - 8.40, திருச்சி - 9.50, விழுப்புரம் - 1.54, தாம்பரம் - 1.13 மணிக்கு நிற்கும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் - பிற்பகல் 2.50 புறப்பட்டு நெல்லையை இரவு 10.40 மணிக்கு சென்றடையும்.
தாம்பரம் - 3.18, விழுப்புரம் - 4.39, திருச்சி - 6.40, திண்டுக்கல் - 7.56, மதுரை - 8.40, விருதுநகர் - 9.13.
பயண நேரம் - 7.50 மணி நேரத்தில் சென்றடையும். மொத்த பயண தூரம் 652.49 கிலோமீட்டர். ரயில் செல்லும் வேகம் மணிக்கு 83.30 கிலோமீட்டர் ஆகும்.
இந்த ரயிலின் கட்டணம் எக்சிகியூட்டிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ. 3,005 ஆகவும், ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 1,610 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
{{comments.comment}}