சென்னை : பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் சென்னைக்கு திரும்பி வருவதால் சென்னைக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பல கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவித்து நிற்கின்றன. மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதியன்று கொண்டாடப்பட்டது. ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது. தொடர் விடுமுறை காரணமாக பலரும் ஜனவரி 10ம் தேதியில் இருந்தே சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி விட்டனர். ஆரம்பத்தில் ரயில் மற்றும் பஸ்களில் மட்டுமே கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஜனவரி 13ம் தேதி முதல் பலரும் சொந்த வாகனங்களில் ஊர்களுக்கு புறப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கு நேர்மாறாக பொங்கல் விடுமுறையின் போது நான்கு நாட்களும் சென்னையின் முக்கிய சாலைகள் பலவும் வெறிச்சோடி காணப்பட்டன. சுமார் 6 லட்சம் வரையிலான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லுவோரின் அதிகமாகவே இருந்தது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து பலரும் சென்னை திரும்பி வருவதால் கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையின் புறநகர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. அதிலும் நேற்று மாலை முதல் மிக அதிகமானவர்கள் சென்னை நோக்கி பயணித்து வருவதால் கிளாம்பாக்கம் பகுதியில் 5 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் செல்வோர் இன்று கட்டாயம் ஊர் திரும்ப வேண்டிய நிலை உள்ளதால் மதுரையில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு, ரூ.6000 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}