- பா. பானுமதி
அலட்சியம் செய்தாலும்
அரவணைக்க தவிக்கும்
எடுத்து எறிந்தாலும்
ஏற்று கொள்ள துடிக்கும்
கசக்கி விட்டாலும் கரிசனம் காட்டும்
வலிகள் கொடுத்தாலும் வழிகாட்டி உயர்த்தும்
அடிகள் வாங்கினாலும் ஆதரவு கொள்ளும்
வெட்டி சாய்த்தாலும் வேர் மறுபடி துளிரும்
கட்டிக்கொண்டால் கரைந்து போகும்
ரணமாக்கினாலும் குணமாகி மனம் விட்டு போகாது
பொய்கள் எல்லாம் பூவாய் நினைக்கும்
மெய்யாக இருந்தால் மேனி சிலிர்க்கும்
எவ்வளவு சுட்டாலும் தங்கமாய் ஜொலிக்கும்
என்ன தான் திட்டினாலும் வைரமாய் மின்னும்

மின்சாரமாய் தாக்கினாலும் பொன்னாரமாய் ஒளிரும்
ஆயுதம் காட்டினாலும் அச்சமின்றி ஆட்கொள்ளும்
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி ஏணியில் ஏற்றிடும்
தனக்கென வாழாமல் உனக்கென உருகும்
உண்மையான அன்பு ஆண்டவன் ஆசீர்வாதம் அன்றோ...
அன்பை உணராமல் அலட்சியம் செய்தாலும் அவர்
அடி பணியும் அன்பு என்ன சொல்ல
அன்பும் ஒரு அறியாமையோ...?
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
சமையல் துணுக்குகள்: ஹோட்டல் ஸ்டைல் பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. சிவப்பு மை கொடுத்த சிகரம்!
மனத்தின் மடை திறந்ததே!
Trust is based on the actions .. செயல்களில்தானே எல்லாமே!
Tireless Days .. சத்தமில்லாமல் வரும் விடியல் எனும் தோழன்!
Right people will stay to figure it out with you
சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
{{comments.comment}}