சென்னை: சென்னையில் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வந்த டாக்டர் அன்விதா என்பவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்துபோதே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஜிம்முகளில் உடற்பயிற்சி செய்யும்போது சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன. இந்த திடீர் மரணங்களுக்கு என்ன காரணம் என்பது இதுவரை தெளிவாக சொல்லப்படவில்லை. ஆனால் மரணங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் ஒரு கல்லூரி மாணவர் டிரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல ஆந்திராவில் நடந்தது.. ஏன் சென்னையிலும் கூட நடந்தது. இப்போது ஒரு பெண் டாக்டர் இதுபோல மரணமடைந்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
அந்த இளம் பெண் டாக்டரின் பெயர் அன்விதா. 24 வயதுதான் ஆகிறது. தனியார்ர மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக ஜிம்முக்குப் போய் வந்தது. வழக்கம் போல அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அன்விதாவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளது தெரிய வந்தது.
மரணமடைந்த அன்விதா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்தவர். இவரது தந்தை சென்னை நகரின் பிரபலமான கண் மருத்துவர் ஆவார். அன்விதா உடற்பயிற்சிக்குப் போய் வந்த ஜிம் கீழ்ப்பாக்கம் புது ஆவடி சாலையில் உள்ளது. இங்குதான் அவர் தினசரி தீவிர உடற்பயிற்சி செய்து வந்தார்.
இந்தியாவில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து சமீபத்தில் ஐசிஎம்ஆர் விளக்கம் தெரிவித்திருந்தது. அதில் கொரோனா பாதிப்புக்குப் பின்னர் இதுபோன்ற மாரடைப்புகள் அதிகரித்திருப்பதாக அது தெரிவித்திருந்தது. ஆனால் கொரோனா வாக்சின் இதற்குக் காரணம் அல்ல என்றும் கொரோனா பாதிப்பு, வாழ்க்கை முறை மாற்றம், உடலில் உள்ள பிற பாதிப்புகள் காரணமாக இருக்கலாம் என்று அது விளக்கியிருந்தது.
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
{{comments.comment}}