செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்ற.. இந்திய அணிக்கு.. மூன்று கோடியே 20 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு..!

Sep 26, 2024,12:39 PM IST

புதுடெல்லி:   செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதல்முறையாக தங்கம் என்ற இந்திய அணிக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது இந்திய செஸ் கூட்டமைப்பு. 


45 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள், குகேஷ், அர்ஜுன் எரிகைசி மற்றும் ஆர் பிரக்ஞானந்தா ஆகியோர் அடங்கிய ஆண்கள் அணியும், ஹரிகா, தானியா சச்தேவ், ஆர் வைஷாலி தலைமையிலான மகளிர் அணியும் பங்கேற்றனர். இதில் குகேஷ் 11 சுற்றுகளில் 10 சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து  22 க்கு 21 புள்ளிகள் பெற்று இந்தியாவை முதல் இடத்திற்கு முன்னேற்றமடைய செய்தார். அதேபோல் பெண்கள் அணியும் இறுதிப் போட்டியில் அஜர்பைஜானவை தோற்கடித்து தங்கத்தை வென்றனர்.




செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் இந்திய அணிக்கு முதல் முதலாக இரண்டு தங்கத்தை வென்று கொடுத்து அசத்தலான சாதனை படைத்துள்ளன.இதற்காக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை புதுடில்லியில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டு விழா நடத்தியது. அப்போது செஸ் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாயை பரிசுத்தொகை வெகுமதியாக அறிவித்தது.


இந்தத் தொகையை வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தலா 25 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்களான அபிஜீத் குண்டே மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி செஸ் வீரர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்