புதுடெல்லி: செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதல்முறையாக தங்கம் என்ற இந்திய அணிக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது இந்திய செஸ் கூட்டமைப்பு.
45 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள், குகேஷ், அர்ஜுன் எரிகைசி மற்றும் ஆர் பிரக்ஞானந்தா ஆகியோர் அடங்கிய ஆண்கள் அணியும், ஹரிகா, தானியா சச்தேவ், ஆர் வைஷாலி தலைமையிலான மகளிர் அணியும் பங்கேற்றனர். இதில் குகேஷ் 11 சுற்றுகளில் 10 சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 22 க்கு 21 புள்ளிகள் பெற்று இந்தியாவை முதல் இடத்திற்கு முன்னேற்றமடைய செய்தார். அதேபோல் பெண்கள் அணியும் இறுதிப் போட்டியில் அஜர்பைஜானவை தோற்கடித்து தங்கத்தை வென்றனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் இந்திய அணிக்கு முதல் முதலாக இரண்டு தங்கத்தை வென்று கொடுத்து அசத்தலான சாதனை படைத்துள்ளன.இதற்காக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை புதுடில்லியில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டு விழா நடத்தியது. அப்போது செஸ் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாயை பரிசுத்தொகை வெகுமதியாக அறிவித்தது.
இந்தத் தொகையை வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தலா 25 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்களான அபிஜீத் குண்டே மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி செஸ் வீரர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}