புதுடெல்லி: செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதல்முறையாக தங்கம் என்ற இந்திய அணிக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது இந்திய செஸ் கூட்டமைப்பு.
45 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள், குகேஷ், அர்ஜுன் எரிகைசி மற்றும் ஆர் பிரக்ஞானந்தா ஆகியோர் அடங்கிய ஆண்கள் அணியும், ஹரிகா, தானியா சச்தேவ், ஆர் வைஷாலி தலைமையிலான மகளிர் அணியும் பங்கேற்றனர். இதில் குகேஷ் 11 சுற்றுகளில் 10 சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 22 க்கு 21 புள்ளிகள் பெற்று இந்தியாவை முதல் இடத்திற்கு முன்னேற்றமடைய செய்தார். அதேபோல் பெண்கள் அணியும் இறுதிப் போட்டியில் அஜர்பைஜானவை தோற்கடித்து தங்கத்தை வென்றனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் இந்திய அணிக்கு முதல் முதலாக இரண்டு தங்கத்தை வென்று கொடுத்து அசத்தலான சாதனை படைத்துள்ளன.இதற்காக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை புதுடில்லியில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டு விழா நடத்தியது. அப்போது செஸ் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாயை பரிசுத்தொகை வெகுமதியாக அறிவித்தது.
இந்தத் தொகையை வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தலா 25 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்களான அபிஜீத் குண்டே மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி செஸ் வீரர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}