செஸ் ஒலிம்பியாட்.. தங்கம் வென்ற.. இந்திய அணிக்கு.. மூன்று கோடியே 20 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு..!

Sep 26, 2024,12:39 PM IST

புதுடெல்லி:   செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதல்முறையாக தங்கம் என்ற இந்திய அணிக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது இந்திய செஸ் கூட்டமைப்பு. 


45 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள், குகேஷ், அர்ஜுன் எரிகைசி மற்றும் ஆர் பிரக்ஞானந்தா ஆகியோர் அடங்கிய ஆண்கள் அணியும், ஹரிகா, தானியா சச்தேவ், ஆர் வைஷாலி தலைமையிலான மகளிர் அணியும் பங்கேற்றனர். இதில் குகேஷ் 11 சுற்றுகளில் 10 சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து  22 க்கு 21 புள்ளிகள் பெற்று இந்தியாவை முதல் இடத்திற்கு முன்னேற்றமடைய செய்தார். அதேபோல் பெண்கள் அணியும் இறுதிப் போட்டியில் அஜர்பைஜானவை தோற்கடித்து தங்கத்தை வென்றனர்.




செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் இந்திய அணிக்கு முதல் முதலாக இரண்டு தங்கத்தை வென்று கொடுத்து அசத்தலான சாதனை படைத்துள்ளன.இதற்காக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை புதுடில்லியில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டு விழா நடத்தியது. அப்போது செஸ் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு மூன்று கோடியே 20 லட்சம் ரூபாயை பரிசுத்தொகை வெகுமதியாக அறிவித்தது.


இந்தத் தொகையை வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தலா 25 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்களான அபிஜீத் குண்டே மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி செஸ் வீரர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்