சென்னை: தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இது பண பிரச்சனை அல்ல இன பிரச்சனை. இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும், பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம் என உறுதியாக உள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில்,

இருமொழிக்கொள்கை விவகாரத்தில் பாஜகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் தங்களது உணர்வை வெளிப்படுத்தின. தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இது பண பிரச்சனை அல்ல இன பிரச்சனை. இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும், பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம் என உறுதியாக உள்ளோம். இந்தி மொழியால் தான் பணம் வரும் என்று கூறினால் அந்த பணமே வேண்டாம் என தீர்மானிப்போம். திராவிட ஆட்சியில் தமிழ் மொழி காப்பதே இரு கண்கள். தமிழகத்துக்கு உரிய நிதியை தராவிட்டாலும் இனமானத்தை அடகு வைக்கும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. யார் எந்த மொழியை கற்கவும் நாம் தடையாக இருந்ததில்லை. எந்த மொழிக்கும் எதிரானவர் அல்ல நாம்.
இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கின்றனர். மாநிலங்களை தங்கள் கொத்தடிமைகளாக நினைப்பதாலேயே மொழியை திணிக்கிறது. மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமையை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும் என்றார்.
இந்த இருமொழி கொள்கை தான் அரை நூற்றாண்டாக தமிழகத்தை வளர்த்து வந்துள்ளது. உலக அளவில் பரவி தமிழக மக்கள் வாழவும், உன்னதமான உயரத்தை அடையவும் வழி வகுத்தது இந்த இருமொழி கொள்கை தான். மொழி கொள்கையில் தமிழகம் வகுத்துள்ள பாதையே சரி என்பதில், அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவில் பல மாநிலங்களும் உணர்ந்து வருகிறது. இன்னொரு மொழியை அனுமதித்தால், அது நமது மொழியை மென்று தின்றுவிடும் என்பதை வரலாற்று பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தான் இருமொழி கொள்கையை இறுக்கமாக பிடிக்கிறோம்.
இந்தியாவின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநில சுயாட்சியை வென்று எடுக்கவும் சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டி கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழினத்தை உயர்த்த முடியும் என்று உறுதிபட தெரிவித்து அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
பழனி மலை முருகா.. திருவாவினன்குடி திருக்கோவில் சிறப்புகள்!
பாதையை மாற்றும் போதை
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை...பேசவும் தடையில்லை
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
{{comments.comment}}