இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!

May 15, 2025,05:03 PM IST

டெல்லி:பயணிகளின் அடையாளத்தை பாதுகாப்பாகவும், விமான நிலையங்களில் விரைவாக சரிபார்க்கவும் பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ பாஸ்போர்ட் பயன்பாடு அமலுக்கு வந்துள்ளது . 



 சிப் பொருத்தப்பட்ட பயோமெட்ரிக் இ பாஸ்போர்ட் முறைகள் ஏற்கனவே அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, உட்பட 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இதன் பயன்பாடு எல்லை பாதுகாப்பை மேம்படுத்துதல், குடியேற்ற நடைமுறைகளை நெறிப்படுத்துதல், அடையாளத் திருட்டை தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு இ பாஸ்போர்ட்டுகளை செயல்படுத்த நாகூர், ஜம்மு, சிம்லா, அமிர்தரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சோதனை முயற்சிகள் நடத்தப்பட்டு வந்தன.




இந்த நிலையில் இந்தியாவில் பயோமெட்ரிக் விபரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட் பயன்பாடு அமலுக்கு கொண்டு வந்துள்ளது வெளியுறவுத்துறை.


சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட் அல்லது மின்னணு பாஸ்போர்ட் ( இ- பாஸ்போர்ட்) என்பது நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அடையாள ஆவணமாகும் . இதில் மைக்ரோசிப் அல்லது ( ரேடியோ அதிர்வெண் அடையாளம்) சிப் பொருத்தப்பட்டிருக்கும்.

அதாவது இந்த பாஸ்போர்ட் புத்தகத்தின் முன் அல்லது பின்புறக் கட்டத்தில் மைக்ரோசிப் பொறுத்தப்பட்டிருக்கும்.


சிப்பில் பயணிக்கும் நபரின் அடையாளத் தகவல்கள், புகைப்படம், கைரேகை மற்றும் கணக்கீட்டு விவரங்கள் உள்ளன. மறைக்கப்பட்ட தகவல்கள் உள்ளதால், தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். பயனர் அடையாளத்தை சரிபார்க்க உயர் தரம் கொண்ட பயோமெட்ரிக் முறைகள் பயன்படுத்தப்படும்.


விமான நிலையங்களில் சிப்கானர் ( சிப் ஸ்கேனர்) மூலம் பாஸ்போர்ட் சரிபார்க்கப்படுகிறது.மானுடத்துடன் தொடர்பு இல்லாமல் ( contactless) சரிபார்ப்பு நடைபெறுவதால் வேகமாக செயல்படும்.


சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்டின் நன்மைகள்:


சிப்பில் அடையாளத் தகவல்கள் குறியீட்டாக இருப்பதால், போலியான பாஸ்போர்ட்களை உருவாக்குவது கடினம்.


பல்வேறு நாடுகள் E- passport- ஐ அங்கீகரித்து வருகின்றன.


பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் நபரின் அடையாளம் துல்லியமாக உறுதி செய்யப்படுகிறது.


விமான நிலையங்களில் காத்திருப்பு நேரம் குறையும்.


தரவுகள் பாதுகாப்பாக உள்ளதால், அடையாளத் திருட்டு குறைவாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்