சென்னை: மக்களின் எதிர்பார்ப்புகளை கவனத்திற்குக் கொண்டு அதற்குத் தேவையான திட்டங்களையும் சட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது என்று முதல்வர் சி ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் பேசிய கன்னிப் பேச்சு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகரன் இன்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரை அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர். அதன் பின்னர் கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகரை வாழ்த்திப் பேசினர்.
எல்லாக் கட்சிகளிலிருந்தும் ஒரு தலைவர் மட்டுமே பேசினார். ஆனால் அதிமுகவிலிருந்து மட்டும் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி. வேலுமணி என இருவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
கடைசியாக முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்துரை வழங்கினார். தனது பேச்சின்போது முதல்வர் விஜய் குறிப்பிட்டதாவது:

மக்களுக்காக மக்களால் மக்களே நடத்துவதுதான் ஜனநாயக ஆட்சி. இன்று மக்களாட்சி அமைந்துள்ளது. மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்புகளை கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றை நிறைவேற்றிய திட்டங்கள் சட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
இங்கு அனைவரும் சமம். ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் பல இங்கு இடம் பெற்றிருந்தாலும் அவர்களது கருத்துக்களுக்கும், அதிக உறுப்பினர்கள் கொண் கட்சிகளின் கருத்துக்களுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்படும். நல்லது எடுக்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் பேரவை செயல்படும். அதற்குரிய வiகையில் நடத்திச் செல்லும் பண்பை பெற்றிருப்பவரையே தவெக முன்மொழிந்து சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்துள்ளது.
தவெக உறுப்பினர்கள் பேரவைத் தலைவருக்கு உதவிக்கரமாக இருப்பார்கள். பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடம் ஒப்படத்துள்ளனர் என்றார் விஜய்.
தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?
தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!
"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!
மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு
15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
{{comments.comment}}