- எழுத்து மின்னல் பாத்திமா அப்றா
அமைதியாய் இருக்கும் புயல்
எப்போதும் அமைதியாய் இருந்து விடாது
ஒருநாள் கர்ஜிக்கும்
வானத்தையே புரட்டிப் போடும்
அதுபோலத்தான்
எழுதாமல் இருந்த என் கை
எப்போதும் எழுதாமல் இருந்து விடாது
ஒருநாள் மையைத் தொடும்
காலத்தையே எழுதி வைக்கும்
என் மௌனம் கோழைத்தனம் அல்ல
என் வார்தைகளைச் சேகரிக்கும் காலம்
என் அமைதி தோல்வி அல்ல
என் கவிதைக்கான கர்ப காலம்

இத்தனை நாள் நான் பார்த்தேன்
கேட்டேன்
அழுதேன்
சிரித்தேன்
எல்லாவற்றையும் நெஞ்சில் சேமித்தேன்
இனி நான் எழுதுவேன்
நான் விழுந்த கதையை
நான் எழுந்த கதையை
நான் நேசித்த கதையை
நான் தோற்று வென்ற கதையை
அமைதியாய் இருக்கும் புயல் போல
என் பேனாவும் ஒருநாள் வெடிக்கும்
ஏனெனில்...
எழுதாமல் இருந்த என் கை
எப்போதும் எழுதாமல் இருந்து விடாது...!
சிந்தனை.. கணவன் சொல்லை மீறியதன் விளைவு : தாட்சாயிணி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
சிவனே! போற்றி! போற்றி.. அழகிய சிங்கரின் என்பா
சிந்தனைச் சிதறல்.. உரிமையென உணர்ந்து உணர்வோடு கொண்டாடுவோம்!
அமைதியாய் இருக்கும் புயல்!
பரம ஏழை!
பள்ளிப் பயண வழியில்!
ஐம்பதைத் தாண்டியும் ஆழ் மனதின் ஓரத்தில்!
இயற்கையின் மடியில்!
{{comments.comment}}