சென்னை: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இறங்கியுள்ள இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய படைகள், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தன. தொடர்ந்தும் பாகிஸ்தான் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியுள்ளது. இதனால் எல்லைப் புற மாநிலங்களில் பதட்டமான நிலை காணப்படுகிறது.
நமது படையினரின் தீரமான நடவடிக்கைக்கு நாடு முழுவதும் அனைத்து மக்களும் பேராதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழ்நாடு ராணுவத்தின் போர் நடவடிக்கைகளில் உடன் இருக்கிறது என்பதைக் காட்டவும் சென்னையில் நாளை பேரணி நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.
நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம் என்று முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
அழகர் கள்ளழகர்!
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
யாராகப் பிறக்க ஆசை?
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
Pooranavalli Sekar Tamil Short Story: துணிச்சலான முடிவு !
Tamil Short Story: தெர்மாஸ் பிளாஸ்க்!
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}