சென்னை: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இறங்கியுள்ள இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய படைகள், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தன. தொடர்ந்தும் பாகிஸ்தான் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியுள்ளது. இதனால் எல்லைப் புற மாநிலங்களில் பதட்டமான நிலை காணப்படுகிறது.
நமது படையினரின் தீரமான நடவடிக்கைக்கு நாடு முழுவதும் அனைத்து மக்களும் பேராதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழ்நாடு ராணுவத்தின் போர் நடவடிக்கைகளில் உடன் இருக்கிறது என்பதைக் காட்டவும் சென்னையில் நாளை பேரணி நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.
நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம் என்று முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!
பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா
{{comments.comment}}