ரூ. 98 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து.. ரூ. 426 கோடி திட்டங்களைத் திறந்து வைத்த.. முதல்வர் ஸ்டாலின்

Oct 29, 2024,06:44 PM IST

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்படும் 98.21 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு திட்டப்பணிகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். அதே சமயம் முடிவுற்ற திட்டங்களான 426 கோடியே 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 3268 அடுக்குமாடி குடியிருப்பு கட்டங்களையும், 156 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களையும் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.


திமுக பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில்  உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நான் முதல்வன் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களையும் திறந்து வைத்தார்.




அந்த அடிப்படையில் உயர் கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் புதிய வகுப்பறைகள், ஆய்வக கட்டடங்கள், கலையரங்க விடுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டடங்கள், போன்றவை சென்னை திருநெல்வேலி மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ளன. உயர் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ளன‌.இந்த கட்டிடங்கள்  ரூபாய் 156 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.


அதேபோல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூபாய் 426 கோடியே 32 லட்சம் செலவில் 3268 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.


இந்த நிலையில் ரூபாய் 426 புள்ளி 32 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268  புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், 156 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கல்விசார் கட்டிடங்களையும் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதே சமயத்தில் சென்னையில் சி எம் டி ஏ மேற்கொள்ளப்படும் 98.21 கோடி மதிப்பிலான ஆறு திட்டப் பணிகளை இன்று துவக்கி வைத்தார்.  

இதில் பெரும்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் பணிக்காக ரூபாய் 23.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்த ரூபாய் 20.61 கோடியும், அயனம்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்த ரூபாய் 20.45 கோடியும், வேளச்சேரி ஏரிக்கரையை மேம்படுத்த ரூபாய் 19.42 கோடியும், சிக்கனான் ஏரிக்கரையை மேம்படுத்த ரூபாய் 9.60 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ரூபாய் 4.50 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் அலகு படுத்தல் பணிக்காகவும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது

news

பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்