சென்னை: அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பளிச்சென சொல்லியுள்ளார். மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று அவர் கூறியிருப்பது பல கேள்விகளுக்குப் பதிலாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் வரப் போவதாக நீண்ட நாளாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவாரா என்ற கேள்வி நீண்ட நாட்களாக கேட்கப்பட்டு வருகிறது.
தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினர் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு அளித்த ஒரு பேட்டியின்போது முதல்வர் கூறுகையில், கோரிக்கை வலுத்துள்ளது, இன்னும் பழுக்கவில்லை என்று கூறியிருந்தார். அவர் அமெரிக்காவுக்குப் போய் விட்டு வந்து விட்டார். இப்போதும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.
இன்று இதுதொடர்பாக சற்று தெளிவான பதிலைக் கொடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் திமுகவினர் உற்சாகமாகியுள்ளனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஹேப்பி ஆகியுள்ளனர். முதல்வரிடம் இன்று செய்தியாளர்கள் அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் நியமனம் குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறதே என்று கேட்டனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று பதிலளித்தார்.
இதன் மூலம் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறப் போகிறது என்பதை சூசகமாக முதல்வர் உணர்த்தியுள்ளார் என்று கருதப்படுகிறது. அதேபோல ஏமாற்றம் இருக்காது என்று அவர் கூறியிருப்பதால், உதயநிதி ஸ்டாலின் தொடர்பான எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் இருக்காது என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். காரணம், அமைச்சரவை மாற்றமே உதயநிதியை மையமாக வைத்துத்தான் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே உதயநிதி ஸ்டாலின் விரைவில் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படுவார் என்பது கிட்டத்த உறுதியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}