சென்னை: அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பளிச்சென சொல்லியுள்ளார். மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று அவர் கூறியிருப்பது பல கேள்விகளுக்குப் பதிலாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் வரப் போவதாக நீண்ட நாளாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவாரா என்ற கேள்வி நீண்ட நாட்களாக கேட்கப்பட்டு வருகிறது.

தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினர் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு அளித்த ஒரு பேட்டியின்போது முதல்வர் கூறுகையில், கோரிக்கை வலுத்துள்ளது, இன்னும் பழுக்கவில்லை என்று கூறியிருந்தார். அவர் அமெரிக்காவுக்குப் போய் விட்டு வந்து விட்டார். இப்போதும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.
இன்று இதுதொடர்பாக சற்று தெளிவான பதிலைக் கொடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் திமுகவினர் உற்சாகமாகியுள்ளனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஹேப்பி ஆகியுள்ளனர். முதல்வரிடம் இன்று செய்தியாளர்கள் அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் நியமனம் குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறதே என்று கேட்டனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று பதிலளித்தார்.
இதன் மூலம் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறப் போகிறது என்பதை சூசகமாக முதல்வர் உணர்த்தியுள்ளார் என்று கருதப்படுகிறது. அதேபோல ஏமாற்றம் இருக்காது என்று அவர் கூறியிருப்பதால், உதயநிதி ஸ்டாலின் தொடர்பான எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் இருக்காது என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். காரணம், அமைச்சரவை மாற்றமே உதயநிதியை மையமாக வைத்துத்தான் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே உதயநிதி ஸ்டாலின் விரைவில் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படுவார் என்பது கிட்டத்த உறுதியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}