சென்னை: அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பளிச்சென சொல்லியுள்ளார். மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று அவர் கூறியிருப்பது பல கேள்விகளுக்குப் பதிலாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் வரப் போவதாக நீண்ட நாளாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவாரா என்ற கேள்வி நீண்ட நாட்களாக கேட்கப்பட்டு வருகிறது.

தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினர் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு அளித்த ஒரு பேட்டியின்போது முதல்வர் கூறுகையில், கோரிக்கை வலுத்துள்ளது, இன்னும் பழுக்கவில்லை என்று கூறியிருந்தார். அவர் அமெரிக்காவுக்குப் போய் விட்டு வந்து விட்டார். இப்போதும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.
இன்று இதுதொடர்பாக சற்று தெளிவான பதிலைக் கொடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் திமுகவினர் உற்சாகமாகியுள்ளனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஹேப்பி ஆகியுள்ளனர். முதல்வரிடம் இன்று செய்தியாளர்கள் அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் நியமனம் குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறதே என்று கேட்டனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று பதிலளித்தார்.
இதன் மூலம் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறப் போகிறது என்பதை சூசகமாக முதல்வர் உணர்த்தியுள்ளார் என்று கருதப்படுகிறது. அதேபோல ஏமாற்றம் இருக்காது என்று அவர் கூறியிருப்பதால், உதயநிதி ஸ்டாலின் தொடர்பான எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் இருக்காது என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். காரணம், அமைச்சரவை மாற்றமே உதயநிதியை மையமாக வைத்துத்தான் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே உதயநிதி ஸ்டாலின் விரைவில் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படுவார் என்பது கிட்டத்த உறுதியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}