சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய தென் திசையின் தீர்ப்பு நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இந் நூலை திமுக பொருளாளர் டி ஆர் பாலு பெற்றுக்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தற்போது புத்தக வடிவில் கொண்டு வந்து ஆவணப்படுத்தியுள்ளது திமுக. இந்த நூலை முதல்வர் மு.க.ஸ்டாலினே எழுதியுள்ளார்.
முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, முதன்மை செயலாளர் கே என் நேரு, தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய 40க்கு 40 தென்திசையின் தீர்ப்பு என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துறைமுகன் வெளியிட்டார். இதனை டி ஆர் பாலு பெற்றுக் கொண்டார்.
இந்த நூலில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 என்ற அடிப்படையில் அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 40 தொகுதிகளிலும் தேர்தல் வியூகம் என்ன.. அது எப்படி சாத்தியமானது.. என்ற அடிப்படையில் 40க்கு 40 தென்திசை தீர்ப்பு நூலை முதல்வர் மு க ஸ்டாலின் எழுதியிருந்தார்.
முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து முதல்வர் மு க ஸ்டாலின் கூறியதாவது, சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் இருக்கும். மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம் அது வாக்குகளாக மாற்ற நம்முடைய களப் பணி என்பது மிகவும் அவசியம். திமுக வை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் லில் வெற்றி பெறுவது தான் நம்முடைய இலக்கு. அமெரிக்காவில் இருந்தாலும் கட்சி மற்றும் ஆட்சியை கவனித்துக் கொண்டே தான் இருப்பேன் என பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு கை கொடுக்குமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 10, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
{{comments.comment}}