சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடி தனது பணிகளைத் தொடர்வதாக கூறியுள்ளார்.
வாக்கிங் சென்றபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன் இறுதியில் அவர் 3 நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து வருகிறார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் இன்று ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜெகதீப் தன்கர் விரைவில் குணமடைய வேண்டும்.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு
தக்காளி விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு கிலோ ரூ.60.. அப்படீன்னா சட்னிக்கு ஆப்பா!
அதிமுக கூட்டணிக்கு வாங்க.. சீமான், விஜய்யை மீண்டும் அழைத்த எடப்பாடி பழனிச்சாமி.. போவாங்களா!
ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா ஏன்.. என்னவோ நடந்திருக்கிறது.. சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ்
டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ.. பத்திரமாக தரையிறங்கியது.. பயணிகளுக்கு ஆபத்தில்லை
ரவி சாஸ்திரியின்.. சிறந்த இந்திய வீரர்கள் லிஸ்ட்டில்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
வெண்ணெய் .. அது ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்குன்னு தெரியுமா?.. தெரிஞ்சுக்கங்க பாஸு!
{{comments.comment}}