சென்னை: வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அந்நிலைமை மாற்றி வளர்ச்சி சென்னையாக உருவெடுத்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் உள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் புதிய குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் 712 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அதை எல்லாம் மாற்றி வளர்ச்சி சென்னை ஆக மாற்றி வருகிறோம். தென் சென்னை மத்திய சென்னை போன்று வடசென்னையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வட சென்னை வளர்ச்சிக்காக ரூபாய் 6400 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சொன்னதை செய்யக்கூடிய ஆட்சி, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம். அறிவிக்கப்பட்ட எஞ்சிய திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
புதுமைப்பெண் திட்டம் தேர்தல் வாக்குறுதில் அறிவிக்கப்படவில்லை. தமிழ் புதல்வன் திட்டத்தை உருவாக்கிய மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்களிக்க தவறியவர்களுக்காகவும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}