சென்னை: மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் உரையாடினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கிங் போனபோது ஏற்பட்ட தலை சுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் அடிப்படையில் அவர் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். நேற்று இதுகுறித்து அவர் டிவீட் ஒன்றையும் போட்டார். அதில், மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைக் கவனித்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஒரு வீடியோவைப் போட்டுள்ளார்.

அதில், மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}