சொல்லாம கொள்ளாம பிரியாணி சாப்பிடும் போட்டி.. சிக்கலில் கோயம்பத்தூர் ஹோட்டல் உரிமையாளர் கணேஷ்!

Aug 30, 2024,10:55 AM IST

கோயம்பத்தூர்: எந்த முன்னறிவிப்பும் இன்றி பொது இடத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டியை நடத்தியதால் ஹோட்டல் உரிமையாளர் கணேஷ் மீது கோவை காவல்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.


நம் நாட்டில் பல்வேறு வகை வகையான விதவிதமான உணவுகள் இருந்தாலும் கூட பிரியாணி என்று சொன்னாலே நம் நாவில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு நாம் அனைவரும் அதற்கு அடிமைதான். அதிலும் அசைவ  பிரியர்களுக்கு பிரியாணி அமிர்தம். அப்படிப்பட்ட  கம கம பிரியாணியை சாப்பிட்டால் கூடவே ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை யார் தான் விட்டு வைப்பார்கள். 


கோவையில் உள்ள ஒரு ஹோட்டல் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ரயில் பெட்டிகளுடன் ரயில்வே ஸ்டேஷன் போன்ற வடிவில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் ஹோட்டல் உரிமையாளர் கணேஷ் என்பவர் ஒரு சூப்பர் ஆபரை வெளியிட்டார். 




அதன்படி இந்த ஹோட்டலில் தொடர்ந்து ஆறு பிரியாணி சாப்பிடும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். அதேபோல் நான்கு பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் பரிசுத் தொகையும், மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த ஆஃபரை பிரியாணி பிரியர்கள் சும்மா விடுவார்களா. ஒரு பிடி பிடித்து அந்த பரிசு தொகையை தட்டிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் முந்தி அடித்துக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இந்தப் போட்டி மதியம் ஒரு மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேரம் ஆக ஆக  கூட்ட நெரிசல் அலை மோதியதால் இந்த போட்டி இரவு வரை நீடிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.




அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் போன்றவை இணைக்க கூடிய சாலையில் பொது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார், எந்த முன்னறிவிப்பும்  இன்றியும் அனுமதி பெறாமல் பொது இடத்தில் மக்களைக் கூட்டி போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.


பிரியாணி சாப்பிட வந்த ஒருவர் மூன்று  பிரியாணி சாப்பிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்து 50,000 பரிசு தொகையை தட்டிச் சென்றார். அவர் தனது ஆட்டிசம் பாதித்த குழந்தையின் மருத்துவச் செலவைக்காக இதில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்