"வாடை வாட்டுது".. கடும் குளிரில் நடுங்கும் டெல்லி.. பனி மூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

Dec 26, 2023,08:36 AM IST

டெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் அலை வீசுகிறது. பனி மூட்டம் காரணமாக காலையில் போக்குவரத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டது.


வட இந்தியா முழுவதும் இப்போது கடும் குளிர் காலம். மிகக் கடுமையான குளிர் காற்று வீசுவதால் மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். வரும் நாட்களில் இது அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று கடும் குளிரும், பனி மூட்டமும் நிலவியது.


எதிரில் வருபவர் சரியாக தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால் வாகனப் போக்குவரத்து மெதுவாகவே இருந்தது. அதிக அளவிலான வாகனங்களைப் பார்க்கவும் முடியவில்லை.




டெல்லி தவிர பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உ.பி, ராஜஸ்தான், வடக்கு மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் குளிர் கடுமையாக உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்குமாம்.


ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு, புதுச்சேரி,  கேரளாவின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. சென்னையில் பகலில் அதிக அளவில் வெயில் தெரியவில்லை. மாறாக குளிர்காற்றும், வாடையாகவும் இருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்