டெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் அலை வீசுகிறது. பனி மூட்டம் காரணமாக காலையில் போக்குவரத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டது.
வட இந்தியா முழுவதும் இப்போது கடும் குளிர் காலம். மிகக் கடுமையான குளிர் காற்று வீசுவதால் மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். வரும் நாட்களில் இது அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று கடும் குளிரும், பனி மூட்டமும் நிலவியது.
எதிரில் வருபவர் சரியாக தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால் வாகனப் போக்குவரத்து மெதுவாகவே இருந்தது. அதிக அளவிலான வாகனங்களைப் பார்க்கவும் முடியவில்லை.
டெல்லி தவிர பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உ.பி, ராஜஸ்தான், வடக்கு மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் குளிர் கடுமையாக உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்குமாம்.
ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. சென்னையில் பகலில் அதிக அளவில் வெயில் தெரியவில்லை. மாறாக குளிர்காற்றும், வாடையாகவும் இருக்கிறது.
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
{{comments.comment}}