டெல்லி: சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ஏற்கனவே ரூபாய் 1965-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூபாய் 43.50 விலை குறைந்து, ரூ.1921 ஆக விற்பனையாகிறது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் வணிக சிலிண்டர்களின் விலையை தீர்மானிக்கின்றன. அதன்படி சிலிண்டர்களின் பயன்பாடுகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. 2025ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அரசு எண்ணெய் சந்தை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை குறைத்து. வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைத்து , ரூ.1966-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டருக்கு இந்திய எண்ணெய் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது ஒரு வீட்டில் 15 சிலிண்டர்கள் மட்டும் முன்பதிவு செய்ய முடியும். 14.20 கிலோ பயன்படுத்தி விட்டு அதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்த பிறகு தான் கூடுதல் சிலிண்டர்கள் பெற முடியும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் ஒன்று புது கணக்குகள் தொடங்கப்படும் நிலையில், வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைந்துள்ளன.
சென்னையில் கடந்த மாதம் வரை ரூபாய் 1965 க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டரின் விலை, தற்போது ரூபாய் 43.50 குறைந்து, ரூ. 1921 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 818க்கு விற்பனையாகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}