வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மீண்டும் குறைவு..!

Apr 01, 2025,10:20 AM IST

டெல்லி: சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ஏற்கனவே  ரூபாய் 1965-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூபாய் 43.50 விலை குறைந்து, ரூ.1921 ஆக விற்பனையாகிறது.


இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் வணிக சிலிண்டர்களின் விலையை தீர்மானிக்கின்றன. அதன்படி சிலிண்டர்களின் பயன்பாடுகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. 2025ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அரசு எண்ணெய் சந்தை நிறுவனங்கள்  சிலிண்டர் விலையை குறைத்து. வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைத்து , ரூ.1966-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 


இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டருக்கு இந்திய எண்ணெய் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது ஒரு வீட்டில் 15 சிலிண்டர்கள் மட்டும் முன்பதிவு செய்ய முடியும். 14.20 கிலோ பயன்படுத்தி விட்டு அதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை  கடிதமாக தந்த பிறகு தான் கூடுதல் சிலிண்டர்கள் பெற முடியும் என அறிவித்திருந்தது.




இந்த நிலையில் இன்று ஏப்ரல் ஒன்று புது கணக்குகள் தொடங்கப்படும் நிலையில், வணிக  சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைந்துள்ளன. 

சென்னையில் கடந்த மாதம் வரை ரூபாய் 1965 க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டரின் விலை, தற்போது ரூபாய் 43.50 குறைந்து, ரூ. 1921 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதே சமயத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 818க்கு விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்