டெல்லி: சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ஏற்கனவே ரூபாய் 1965-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூபாய் 43.50 விலை குறைந்து, ரூ.1921 ஆக விற்பனையாகிறது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் வணிக சிலிண்டர்களின் விலையை தீர்மானிக்கின்றன. அதன்படி சிலிண்டர்களின் பயன்பாடுகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. 2025ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அரசு எண்ணெய் சந்தை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை குறைத்து. வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைத்து , ரூ.1966-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டருக்கு இந்திய எண்ணெய் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது ஒரு வீட்டில் 15 சிலிண்டர்கள் மட்டும் முன்பதிவு செய்ய முடியும். 14.20 கிலோ பயன்படுத்தி விட்டு அதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்த பிறகு தான் கூடுதல் சிலிண்டர்கள் பெற முடியும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் ஒன்று புது கணக்குகள் தொடங்கப்படும் நிலையில், வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைந்துள்ளன.
சென்னையில் கடந்த மாதம் வரை ரூபாய் 1965 க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டரின் விலை, தற்போது ரூபாய் 43.50 குறைந்து, ரூ. 1921 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 818க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}