சென்னை: தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையையும் காவல்துறையின் நடவடிக்கையும் மக்கள்
பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். இதனை எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியலாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி தற்போது நடைபெற்று வருகின்றது. தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொண்ட முதல்வர் நம்முடைய முதல்வர் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அவரது பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில், அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் நடவடிக்கை எடுத்து காவல் துறையினர் ஞானசேகரனை கைது செய்துள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், குற்றவாளி யாருடன் செல்போனில் பேசினார் என்பதை அவர் பேசிய எண்ணை வைத்து மத்திய அரசு கண்டுபிடித்து வெளியிடாதது ஏன்?
மிஸ்டு கால், டயல்டு கால், ரிசிவ்டு கால் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் மத்திய அரசின் சர்வரில் இருக்கிறது. அவர்கள் ஏன் இதை வெளியிடவில்லை? எதற்காக இந்த விவகாரத்தில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை விட எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் பேசும் அரசியல் மிக மிக கொடுமையாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார். நேற்று அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் யார் அந்த சார் என்று சொல்ல முடியுமா என்பது தான் எங்களுடைய கேள்வி. ஆனால், இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை என்றார் செல்வப்பெருந்தகை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}