Modi Swearing in: பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே!

Jun 09, 2024,09:50 AM IST
டெல்லி: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பதவியேற்பு விழாவில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி, நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக இன்று பதவியேற்க உள்ளார். இரவு 07.15 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் 30 பேர் கொண்ட அமைச்சரவையுடன் பிரதமர் மோடி பதவியேற்றுக் கொள்ள உள்ளார். இதில் வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட 2000 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.



இந்நிலையில் பிரதமரின் பதவியேற்பு விழாவில் தங்களுக்கு இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை என நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கூறி இருந்தனர். எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு கிடையாது. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறி இருந்தனர். 

ஆனால் அவர்கள் பேட்டி அளித்த சிறிது நேரத்திலேயே பிரதமர் அலுவலகத்தில் இருந்து மல்லிகார்ஜூனேவை போனில் அழைத்து, பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ் விரைவில் அவருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  அதேசமயம், இந்த பதவியேற்பு விழாவில் திரினமூல் காங்கிரஸ் பங்கேற்காது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

பாஜக லோக்சபா தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆதரவு கடிதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் 2 நாட்களுக்கு முன் அளிக்கப்பட்டது. அதோடு எம்.பி.,க்களின் ஆதரவு கடிதத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணி, ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளனர். பிரதமரின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு பதவியேற்க உள்ளதால், முன்னதாக காலையில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்