- ஸ்வர்ணலட்சுமி
நம் உணவுகளில் அனைத்து சமையல்களிலும் சாம்பார், பொரியல் ,கூட்டு போன்றவற்றில் தாளிக்க மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் கருவேப்பிலையை உட்கொள்கிறோமா!.. என்றால் இல்லை .அதனை உணவில் இருந்து எடுத்து ஒரு பக்கம் வைத்து விட்டு தான் உண்கிறோம். ஒரு கூற்று ஒன்று இருக்கிறது "என்னை கருவேப்பிலை போன்ற அனைத்திற்கும் பயன்படுத்திக் கொண்டு தூர எறிந்து விடுவீர்கள்" என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல எல்லா உணவிலும் பயன்படும் கருவேப்பிலை முழுமையாக நம் உடலுக்கு நன்மை பயக்கும் கருவேப்பிலையை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிட அதீத நன்மை பயக்கும்.
சரி இப்ப லஞ்ச் பாக்ஸ் ரெசிபியைப் பார்ப்போமா.. கம கம கறிவேப்பிலை சட்டினி எளிமையாகவும், விரைவாகவும் எப்படி? செய்யலாம் என்று பார்க்கலாம்... வாருங்கள்... கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்:

1. கருவேப்பிலை ஒரு கப் நிறைய (நன்றாக கழுவி வைக்கவும்)
2. கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன்
3.வர மிளகாய் மூன்று (தேவைக்கு ஏற்ப)
4. சீரகம் அரை ஸ்பூன்
5.பெருங்காயத்தூள் -1/4ஸ்பூன்
6. தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
7.பெரிய நெல்லிக்காய் ஒன்று
8. உப்பு தேவைக்கு ஏற்ப
9. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன்
10. பூண்டு ஆறு பல்
(குறிப்பு : புளிப்பு அதிகம் விரும்புபவர்கள் புளி பயன்படுத்தலாம்)
செய்முறை:
1. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்.
2. பிறகு பூண்டு, சீரகம், வரமிளகாய் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
3. அடுப்பை சிம்மில் வைத்து கழுவிய கருவேப்பிலை சேர்க்கவும்
4. பெருங்காயத்தூள் சேர்க்கவும்
5. லேசாக வதக்கவும் . கருவேப்பிலையின் பச்சை நிறம் அப்படியே இருக்க வேண்டும்
6. அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் துருவல் சேர்க்கவும். பெரிய நெல்லிக்காய் கட் செய்து சேர்க்கவும்.
7. இவை சூடு நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
8. உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
அருமையான கமகமவென கருவேப்பிலை சட்னி தயார் .இது சூடான சாதத்திற்கும் ,இட்லி தோசைக்கும் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து கொள்ள கருவேப்பிலை வதக்கும் போதே சிறிது புளி சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கம கம காரசார கருவேப்பிலை சட்னி செய்து பாருங்கள். மேலும் இதுபோன்ற ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
{{comments.comment}}