- ஸ்வர்ணலட்சுமி
நம் உணவுகளில் அனைத்து சமையல்களிலும் சாம்பார், பொரியல் ,கூட்டு போன்றவற்றில் தாளிக்க மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் கருவேப்பிலையை உட்கொள்கிறோமா!.. என்றால் இல்லை .அதனை உணவில் இருந்து எடுத்து ஒரு பக்கம் வைத்து விட்டு தான் உண்கிறோம். ஒரு கூற்று ஒன்று இருக்கிறது "என்னை கருவேப்பிலை போன்ற அனைத்திற்கும் பயன்படுத்திக் கொண்டு தூர எறிந்து விடுவீர்கள்" என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல எல்லா உணவிலும் பயன்படும் கருவேப்பிலை முழுமையாக நம் உடலுக்கு நன்மை பயக்கும் கருவேப்பிலையை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிட அதீத நன்மை பயக்கும்.
சரி இப்ப லஞ்ச் பாக்ஸ் ரெசிபியைப் பார்ப்போமா.. கம கம கறிவேப்பிலை சட்டினி எளிமையாகவும், விரைவாகவும் எப்படி? செய்யலாம் என்று பார்க்கலாம்... வாருங்கள்... கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்:
1. கருவேப்பிலை ஒரு கப் நிறைய (நன்றாக கழுவி வைக்கவும்)
2. கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன்
3.வர மிளகாய் மூன்று (தேவைக்கு ஏற்ப)
4. சீரகம் அரை ஸ்பூன்
5.பெருங்காயத்தூள் -1/4ஸ்பூன்
6. தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
7.பெரிய நெல்லிக்காய் ஒன்று
8. உப்பு தேவைக்கு ஏற்ப
9. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன்
10. பூண்டு ஆறு பல்
(குறிப்பு : புளிப்பு அதிகம் விரும்புபவர்கள் புளி பயன்படுத்தலாம்)
செய்முறை:
1. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்.
2. பிறகு பூண்டு, சீரகம், வரமிளகாய் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
3. அடுப்பை சிம்மில் வைத்து கழுவிய கருவேப்பிலை சேர்க்கவும்
4. பெருங்காயத்தூள் சேர்க்கவும்
5. லேசாக வதக்கவும் . கருவேப்பிலையின் பச்சை நிறம் அப்படியே இருக்க வேண்டும்
6. அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் துருவல் சேர்க்கவும். பெரிய நெல்லிக்காய் கட் செய்து சேர்க்கவும்.
7. இவை சூடு நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
8. உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
அருமையான கமகமவென கருவேப்பிலை சட்னி தயார் .இது சூடான சாதத்திற்கும் ,இட்லி தோசைக்கும் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து கொள்ள கருவேப்பிலை வதக்கும் போதே சிறிது புளி சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கம கம காரசார கருவேப்பிலை சட்னி செய்து பாருங்கள். மேலும் இதுபோன்ற ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}