- ஸ்வர்ணலட்சுமி
நம் உணவுகளில் அனைத்து சமையல்களிலும் சாம்பார், பொரியல் ,கூட்டு போன்றவற்றில் தாளிக்க மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் கருவேப்பிலையை உட்கொள்கிறோமா!.. என்றால் இல்லை .அதனை உணவில் இருந்து எடுத்து ஒரு பக்கம் வைத்து விட்டு தான் உண்கிறோம். ஒரு கூற்று ஒன்று இருக்கிறது "என்னை கருவேப்பிலை போன்ற அனைத்திற்கும் பயன்படுத்திக் கொண்டு தூர எறிந்து விடுவீர்கள்" என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல எல்லா உணவிலும் பயன்படும் கருவேப்பிலை முழுமையாக நம் உடலுக்கு நன்மை பயக்கும் கருவேப்பிலையை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிட அதீத நன்மை பயக்கும்.
சரி இப்ப லஞ்ச் பாக்ஸ் ரெசிபியைப் பார்ப்போமா.. கம கம கறிவேப்பிலை சட்டினி எளிமையாகவும், விரைவாகவும் எப்படி? செய்யலாம் என்று பார்க்கலாம்... வாருங்கள்... கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்:
1. கருவேப்பிலை ஒரு கப் நிறைய (நன்றாக கழுவி வைக்கவும்)
2. கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன்
3.வர மிளகாய் மூன்று (தேவைக்கு ஏற்ப)
4. சீரகம் அரை ஸ்பூன்
5.பெருங்காயத்தூள் -1/4ஸ்பூன்
6. தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
7.பெரிய நெல்லிக்காய் ஒன்று
8. உப்பு தேவைக்கு ஏற்ப
9. நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன்
10. பூண்டு ஆறு பல்
(குறிப்பு : புளிப்பு அதிகம் விரும்புபவர்கள் புளி பயன்படுத்தலாம்)
செய்முறை:
1. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்.
2. பிறகு பூண்டு, சீரகம், வரமிளகாய் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
3. அடுப்பை சிம்மில் வைத்து கழுவிய கருவேப்பிலை சேர்க்கவும்
4. பெருங்காயத்தூள் சேர்க்கவும்
5. லேசாக வதக்கவும் . கருவேப்பிலையின் பச்சை நிறம் அப்படியே இருக்க வேண்டும்
6. அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் துருவல் சேர்க்கவும். பெரிய நெல்லிக்காய் கட் செய்து சேர்க்கவும்.
7. இவை சூடு நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
8. உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
அருமையான கமகமவென கருவேப்பிலை சட்னி தயார் .இது சூடான சாதத்திற்கும் ,இட்லி தோசைக்கும் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து கொள்ள கருவேப்பிலை வதக்கும் போதே சிறிது புளி சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கம கம காரசார கருவேப்பிலை சட்னி செய்து பாருங்கள். மேலும் இதுபோன்ற ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்த தவறான மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்டது மெட்டா!
திமுக அரசு தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல: டாக்டர் அன்புமணி
நீலகிரி, கோவைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில்.. பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
புதியதோர் உலகம் செய்வோம்! (கவிதை)
திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!
Coffee with love.. இந்தோனேசியாவின் காபி காமு.. இதைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி தயார்..! நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்கிறார்!
தமிழ்நாடு நாள்.. தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... நம் தமிழ்நாடு!
{{comments.comment}}