- மீனா
சென்னை: பிக் பாஸ் வீட்டில் அவர் பாட்டுக்கு ஜாலியா நடமாடிட்டிருக்கார்.. அவரையே கொந்தளிக்க வச்சுட்டாங்க இன்னிக்கு.. யாரைச் சொல்றீங்க.. அட, நம்ம கூல் சுரேஷைத்தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் இன்றைய முதல் புரமோவில் ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியது. அந்தக் காட்சியில் மொத்தப் பேரும் சேர்ந்து கூல் சுரேஷ் பக்கம் கையைக் காட்டி கடுகடுப்பை ஏற்ற, கொந்தளித்துப் போனார் சுரேஷ்.

மேட்டர் என்ன தெரியுமா.. இதோ இதுதான்!
பிக் பாஸ் இடம் இருந்து வந்த ஒரு அறிக்கையை ரவீனா வாசிக்கிறார். அப்போது, "ஒரு சாபக்கல். இது யாரை சென்று சேருகிறதோ அவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, அடுத்த வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார்". என்று ரவீனா வாசித்து முடித்தவுடன் "பயங்கரமான சாபமாக இருக்கே" என்று சரவணன் கூறுகிறார்.. அத்தோடு விட்டாங்களா.. அடுத்தடுத்து ஒவ்வொருவரும் சொல்லி வச்ச மாதிரி அத்தனைப் பேரும்.. (நம்ம விச்சு அக்கா கூடத்தான்) கூல் சுரேஷ், கூல் சுரேஷ் அண்ணா , கூல் என்று ஒவ்வொருத்தருமே கூல் சுரேஷைக் கையைக் காட்ட "தலைவன்" பொங்கிட்டாப்டி!
கோபமக, "நான் சீரியஸாகத்தான் கேட்கிறேன். உங்களுக்கு ஒரு இளிச்சவாயன் வேணும். அதற்கு நீங்க என்னை தேர்வு செய்வீங்க. ஏமாந்த ஆள் என்ன மட்டும் வச்சு செய்யுங்கப்பா. நானே கல்லை எடுத்துக்கிறேன்" என்று ஆத்திரமடைந்து கூல் சுரேஷ் சொல்லும் போது மற்றவர்கள் சொல்ல வருவதை கேட்காமல் , மேலும் கோபமடைந்து கத்துவதோடு இந்த பிரமோ முடிகிறது.
இப்படி அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக இருப்பதை அறிந்து கொண்ட கூல் சுரேஷின் அடுத்த கட்டநடவடிக்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.. ஆமா.. கூல் ஜாலியாத்தானே இருந்தார்.. இன்னிக்கு ஏன் இப்படி கொந்தளிச்சு குமுறிட்டாரு.. ஒரு வேளை கூல்.. ஹாட்டாகப் போகுதோ!
நமக்கெல்லாம் இதைப் பாக்கிறப்ப ஜாலியாத்தாம்ப்பா இருக்கு!
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}