சாணியால் வீடு கட்டினால்.. அணு ஆயுதத் தாக்குதல் நடந்தாலும் பாதிக்கப்படாது.. குஜராத் நீதிபதி !

Jan 23, 2023,01:06 PM IST
அகமதாபாத்: குஜராத் மாநில நீதிபதி ஒருவர், சாணியால் வீடு கட்டினால், அணு ஆயுதத் தாக்குதலே நடந்தாலும் கூட அதிலிருந்து வீடு தப்பி விடும் என்று தீர்ப்பின்போது கூறியுள்ளார்.



குஜராத் மாநிலம் தபி மாவட்டத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பசுவதை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். தீர்ப்பின்போது அவர் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.

நீதிபதி கூறுகையில், பூமியில் பசு வதையைத்தடை செய்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.  பசுவிலிருந்துதான் மதம் பிறந்தது. பசுவின் சாணியால் வீட்டைக் கட்டினால், அணு ஆயுதத் தாக்குதலே நடந்தாலும் கூட வீடு பாதிக்கப்படாது. பசுவின் சிறுநீர் பல வியாதிகளைப் போக்கும் குணம் கொண்டது. சாணியால் கட்டப்படும் வீடுகள் பலமானவை என்று அறிவியலே நிரூபித்துள்ளது என்றார் நீதிபதி சமீர் வினோத் சந்திர வியாஸ்.

இவரது இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கூறியது போல பசுவின் சிறுநீர் வியாதிகளைக் குணமாக்குவதாக அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

2016லேயே நடந்திருக்க வேண்டியது.. தாமதமாக திமுக கூட்டணிக்கு வந்துள்ளோம்.. பிரேமலதா விஜயகாந்த்

news

திமுக-தேமுதிக கூட்டணி.. கேப்டனின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக எக்ஸ் தள பதிவு!

news

தேமுதிகவின் புதிய பயணம்... இப்ப எந்த நிலையில் இருக்கிறது தேமுதிகவின் வாக்கு வங்கி?

news

இனி ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

தமிழகத்தில் தேனி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

news

காதல் படுத்தும் பாடு!

news

ஒரு மல்லிகை பூக்காரியின் அனுபவம்!

news

சிலிர்க்க வைக்கும் தமிழ்நாட்டு நாட்டுப்புறப் பாரம்பரியம்.. Dancing Through History: Tamil Nadu’s Fol

news

தன்னந்தனியாய் போராட்டம்.. கலையின் பல்பொருள் ஹைக்கூ கவிதைகள்!