சாணியால் வீடு கட்டினால்.. அணு ஆயுதத் தாக்குதல் நடந்தாலும் பாதிக்கப்படாது.. குஜராத் நீதிபதி !

Jan 23, 2023,01:06 PM IST
அகமதாபாத்: குஜராத் மாநில நீதிபதி ஒருவர், சாணியால் வீடு கட்டினால், அணு ஆயுதத் தாக்குதலே நடந்தாலும் கூட அதிலிருந்து வீடு தப்பி விடும் என்று தீர்ப்பின்போது கூறியுள்ளார்.



குஜராத் மாநிலம் தபி மாவட்டத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பசுவதை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். தீர்ப்பின்போது அவர் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.

நீதிபதி கூறுகையில், பூமியில் பசு வதையைத்தடை செய்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.  பசுவிலிருந்துதான் மதம் பிறந்தது. பசுவின் சாணியால் வீட்டைக் கட்டினால், அணு ஆயுதத் தாக்குதலே நடந்தாலும் கூட வீடு பாதிக்கப்படாது. பசுவின் சிறுநீர் பல வியாதிகளைப் போக்கும் குணம் கொண்டது. சாணியால் கட்டப்படும் வீடுகள் பலமானவை என்று அறிவியலே நிரூபித்துள்ளது என்றார் நீதிபதி சமீர் வினோத் சந்திர வியாஸ்.

இவரது இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கூறியது போல பசுவின் சிறுநீர் வியாதிகளைக் குணமாக்குவதாக அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்