சாணியால் வீடு கட்டினால்.. அணு ஆயுதத் தாக்குதல் நடந்தாலும் பாதிக்கப்படாது.. குஜராத் நீதிபதி !

Jan 23, 2023,01:06 PM IST
அகமதாபாத்: குஜராத் மாநில நீதிபதி ஒருவர், சாணியால் வீடு கட்டினால், அணு ஆயுதத் தாக்குதலே நடந்தாலும் கூட அதிலிருந்து வீடு தப்பி விடும் என்று தீர்ப்பின்போது கூறியுள்ளார்.



குஜராத் மாநிலம் தபி மாவட்டத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பசுவதை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். தீர்ப்பின்போது அவர் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.

நீதிபதி கூறுகையில், பூமியில் பசு வதையைத்தடை செய்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.  பசுவிலிருந்துதான் மதம் பிறந்தது. பசுவின் சாணியால் வீட்டைக் கட்டினால், அணு ஆயுதத் தாக்குதலே நடந்தாலும் கூட வீடு பாதிக்கப்படாது. பசுவின் சிறுநீர் பல வியாதிகளைப் போக்கும் குணம் கொண்டது. சாணியால் கட்டப்படும் வீடுகள் பலமானவை என்று அறிவியலே நிரூபித்துள்ளது என்றார் நீதிபதி சமீர் வினோத் சந்திர வியாஸ்.

இவரது இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கூறியது போல பசுவின் சிறுநீர் வியாதிகளைக் குணமாக்குவதாக அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்