சாணியால் வீடு கட்டினால்.. அணு ஆயுதத் தாக்குதல் நடந்தாலும் பாதிக்கப்படாது.. குஜராத் நீதிபதி !

Jan 23, 2023,01:06 PM IST
அகமதாபாத்: குஜராத் மாநில நீதிபதி ஒருவர், சாணியால் வீடு கட்டினால், அணு ஆயுதத் தாக்குதலே நடந்தாலும் கூட அதிலிருந்து வீடு தப்பி விடும் என்று தீர்ப்பின்போது கூறியுள்ளார்.



குஜராத் மாநிலம் தபி மாவட்டத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பசுவதை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். தீர்ப்பின்போது அவர் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.

நீதிபதி கூறுகையில், பூமியில் பசு வதையைத்தடை செய்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.  பசுவிலிருந்துதான் மதம் பிறந்தது. பசுவின் சாணியால் வீட்டைக் கட்டினால், அணு ஆயுதத் தாக்குதலே நடந்தாலும் கூட வீடு பாதிக்கப்படாது. பசுவின் சிறுநீர் பல வியாதிகளைப் போக்கும் குணம் கொண்டது. சாணியால் கட்டப்படும் வீடுகள் பலமானவை என்று அறிவியலே நிரூபித்துள்ளது என்றார் நீதிபதி சமீர் வினோத் சந்திர வியாஸ்.

இவரது இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கூறியது போல பசுவின் சிறுநீர் வியாதிகளைக் குணமாக்குவதாக அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்