சுழற்றியடிக்கும் டானா புயல் எதிரொலி.. கொல்கத்தா, புவனேஸ்வருக்கு ரயில்கள், விமானங்கள் ரத்து

Oct 24, 2024,12:09 PM IST

பூரி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் காரணமாக இன்றும் நாளையும் கொல்கத்தாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் இன்று தீவிரப் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல் தற்போது வடமிருக்கு திசையில் 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது நாளை ஒடிசாவின் பூரி கடற்கரை மற்றும் மேற்கு வங்கம் சாகர் தீவுப் பகுதிக்கும் இடையே அது தீவிரப் புயலாகவே கரையை கடக்க உள்ளது.அப்போது   சூறாவளி காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 




இதனால்  ஒடிசாவில் உள்ள பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ், ஜகத்சிங்பூர்  புரி ஆகிய இடங்களிலும், மற்றும் மேற்குவங்க பகுதிகளில் புர்பா மெதினிபூர், ஜார்கிரம், கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி, பஸ்சிம், தெற்கு 24 பர்கனாஸ் ஆகிய இடங்களிலும் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்குவங்க பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில அரசுகள்.


அதன்படி, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள சுமார் 20 லட்சம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரிசாவில் 20 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மேற்கு வங்கத்தில் 13 தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் என மொத்தம் 33 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருவதால் கொல்கத்தாவில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டிலிருந்து 7 ரயில்கள் ரத்து


டானா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு செல்லும் 21 ரயில்களும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் 7 ரயில்கள் என 28 ரயில்கள் உட்பட, மொத்தம் 300  ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதற்கிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!

news

நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்

news

நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி

news

பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு

news

யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது

news

விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்