ஃபெஞ்சல் புயல்.. 2024ம் ஆண்டில்.. வங்கக் கடலில் பிறந்த 3வது புயல்.. வட கிழக்கு பருவ காலத்தில் 2வது!

Nov 29, 2024,05:17 PM IST

சென்னை: 2024ம் ஆண்டில், வங்கக் கடலில் ரிமால், டானா என  ஏற்கனவே 2 புயல்கள் உருவான நிலையில் தற்போது 3வதாக ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான 2வது புயல் என்ற பெயரைப் பெற்றுள்ளது ஃபெஞ்சல்.

கடந்த மே மாதம் மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவானது. இந்த புயலுக்கு ரிமால் என பெயரிடப்பட்டது‌.  ஆனால் இந்தப் புயல் தமிழ்நாட்டுப் பக்கம் வரவில்லை. மாறாக  ரிமால்  புயல் மேற்குவங்கம் மாநிலத்தில் கரையை கடந்ததால் கொல்கட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கனமழை கொட்டி தீர்த்தது.



இதனையடுத்து வங்க கடலில் மீண்டும்  அக்டோபர் 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த டானா என பெயரிடப்பட்டது. இந்தப் புயலும் நமக்கு வரவில்லை. தமிழக கடற்கரை பகுதிகளை விட்டுவிலகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போது தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்தமானது தற்போது புயலாக மாறி தமிழ்நாட்டை நெருங்கிக் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு  சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் நாளை வட தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான முதல் இரு புயல்களாலும் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. 3வது புயலால் என்ன மாதிரியா விளைவுகள் ஏற்படும் என்பது நாளை இரவுக்குள் தெரிந்து விடும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு  வங்கக்கடலில் ரிமால், டானா, ஃபெஞ்சல், என  3 புயல்கள் உருவாகியுள்ளன. இதில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டும் 2 புயல்கள் உருவாகி உள்ளது. அதில் டானா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எவ்வளவு வீரியத்துடன் உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்