சென்னை : மோந்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள மோந்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு அருகே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆந்திரா, தமிழக கடலோர பகுதிகள், ஒடிசா ஆகிய பகுதிகளுக்கு அதிக கனமழை மற்றும் சூறாவளி காற்றிற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி ஏராளமான மக்கள், வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவுக்கு 240 கி.மீ தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்துக்க 320 கி.மீ., மசிலிப்பட்டினத்துக்கு 160 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. மோன்தா புயல் 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் முதல் முறையாக செயற்கை மழை...காற்றின் தரத்தை சீராக்க புதிய முயற்சி
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
{{comments.comment}}