சென்னை : மோந்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள மோந்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு அருகே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆந்திரா, தமிழக கடலோர பகுதிகள், ஒடிசா ஆகிய பகுதிகளுக்கு அதிக கனமழை மற்றும் சூறாவளி காற்றிற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி ஏராளமான மக்கள், வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவுக்கு 240 கி.மீ தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்துக்க 320 கி.மீ., மசிலிப்பட்டினத்துக்கு 160 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. மோன்தா புயல் 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?
ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?
மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா
10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்
10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!
10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931
The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!
{{comments.comment}}