சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!

Feb 15, 2026,01:50 PM IST

- கலைவாணி ராமு 


சிவராத்திரி திருவருள்

நாயகனே.....

சிங்கார வேலனின் தந்தையே....

சிவ ஞானத்தின் மூலம்

சிந்தை தெளிய வைப்பவனே..

சடை முடி உடையோனே..

சங்கடங்களை தீர்ப்பவனே....


கால காலனே...

கறை கண்டனே...

சுடுகாட்டுச் சாம்பலை

சொர்க்கமாய் பூசியவனே!




நந்தி வாகனனே...

நர்த்தன நடனம் புரிபவனே....

தன் உடலின் சரிபாதியை உமையாளுக்கு

கொடுத்து அர்த்தநாரீஸ்வரனாய் அருள்பவனே....


தலையில் கங்கை தாங்கியவனே...

பிறை நிலவை சூடிய

பித்தனே... பேயனுக்கும்

முத்தி தரும் பெருமானே!


அண்டங்களை ஆள்பவனே...

சாம்பலின் வாசத்தில் சந்தோஷம் கொள்பவனே...

வில்வ மாலையில் விஸ்வரூப தரிசனம் கொடுப்பவரே.....

பஞ்சாட்சர மந்திரத்தில் பவனி வருபவரே...


கண்ணுக்கும் எட்டாத

ஜோதிப் பிழம்பாய் நின்று

அகிலத்தை ஆட்டும்

ஆதி அந்தம் அற்றவனே!


கோபக் கனல் கொண்ட இவர்

ஆனந்த கூத்தாடும் ராத்திரி - சிவராத்திரி


இந்நாளில் சிவனை வணங்கி

சிவ முக்தி அடைவோம்...


ஓம் நமசிவாய!

சிவாய நமக!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?

news

அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம்‌ கோவில் மலைப்பயணம்!

news

Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!

news

சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!

news

கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?

news

தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா

news

அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

news

40 சீட் கொடுத்தே தீரனும்...மீண்டும் புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்

news

சாயந்திரம் ஆயிருச்சா.. வாங்க வாழைக்காய் கனவறுவல் செஞ்சு சாப்பிடலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்