- கலைவாணி ராமு
சிவராத்திரி திருவருள்
நாயகனே.....
சிங்கார வேலனின் தந்தையே....
சிவ ஞானத்தின் மூலம்
சிந்தை தெளிய வைப்பவனே..
சடை முடி உடையோனே..
சங்கடங்களை தீர்ப்பவனே....
கால காலனே...
கறை கண்டனே...
சுடுகாட்டுச் சாம்பலை
சொர்க்கமாய் பூசியவனே!

நந்தி வாகனனே...
நர்த்தன நடனம் புரிபவனே....
தன் உடலின் சரிபாதியை உமையாளுக்கு
கொடுத்து அர்த்தநாரீஸ்வரனாய் அருள்பவனே....
தலையில் கங்கை தாங்கியவனே...
பிறை நிலவை சூடிய
பித்தனே... பேயனுக்கும்
முத்தி தரும் பெருமானே!
அண்டங்களை ஆள்பவனே...
சாம்பலின் வாசத்தில் சந்தோஷம் கொள்பவனே...
வில்வ மாலையில் விஸ்வரூப தரிசனம் கொடுப்பவரே.....
பஞ்சாட்சர மந்திரத்தில் பவனி வருபவரே...
கண்ணுக்கும் எட்டாத
ஜோதிப் பிழம்பாய் நின்று
அகிலத்தை ஆட்டும்
ஆதி அந்தம் அற்றவனே!
கோபக் கனல் கொண்ட இவர்
ஆனந்த கூத்தாடும் ராத்திரி - சிவராத்திரி
இந்நாளில் சிவனை வணங்கி
சிவ முக்தி அடைவோம்...
ஓம் நமசிவாய!
சிவாய நமக!
ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்
எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்
திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
மாலினியின் மாயாஜாலம்.. இல்லத்தரசி டூ யோகா ஆசிரியை - ஒரு தன்னம்பிக்கை பயணம்!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பாம்: சென்னை வானிலை மையம் தகவல்!
தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!
மனித குலத்தின் பாவங்களுக்காக கல்வாரியில் நடந்தேறிய உயிர்த் தியாகம்.. புனித வெள்ளி
{{comments.comment}}