சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!

Feb 15, 2026,01:50 PM IST

- கலைவாணி ராமு 


சிவராத்திரி திருவருள்

நாயகனே.....

சிங்கார வேலனின் தந்தையே....

சிவ ஞானத்தின் மூலம்

சிந்தை தெளிய வைப்பவனே..

சடை முடி உடையோனே..

சங்கடங்களை தீர்ப்பவனே....


கால காலனே...

கறை கண்டனே...

சுடுகாட்டுச் சாம்பலை

சொர்க்கமாய் பூசியவனே!




நந்தி வாகனனே...

நர்த்தன நடனம் புரிபவனே....

தன் உடலின் சரிபாதியை உமையாளுக்கு

கொடுத்து அர்த்தநாரீஸ்வரனாய் அருள்பவனே....


தலையில் கங்கை தாங்கியவனே...

பிறை நிலவை சூடிய

பித்தனே... பேயனுக்கும்

முத்தி தரும் பெருமானே!


அண்டங்களை ஆள்பவனே...

சாம்பலின் வாசத்தில் சந்தோஷம் கொள்பவனே...

வில்வ மாலையில் விஸ்வரூப தரிசனம் கொடுப்பவரே.....

பஞ்சாட்சர மந்திரத்தில் பவனி வருபவரே...


கண்ணுக்கும் எட்டாத

ஜோதிப் பிழம்பாய் நின்று

அகிலத்தை ஆட்டும்

ஆதி அந்தம் அற்றவனே!


கோபக் கனல் கொண்ட இவர்

ஆனந்த கூத்தாடும் ராத்திரி - சிவராத்திரி


இந்நாளில் சிவனை வணங்கி

சிவ முக்தி அடைவோம்...


ஓம் நமசிவாய!

சிவாய நமக!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

news

பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்

news

பெருந்தன்மையின் பொருள்.. விஷால் விளையாட்டுக்கள் (19)

news

பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்

news

சேலத்து மாம்பழம்.. பெங்களூரா மாம்பழம்... தித்திப்பா சாப்பிடுவோம்!

news

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்

news

உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)

news

உன்னை அறிந்தால்!

news

Motivational Monday: தற்செயல் தரிசனங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்