சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!

Feb 15, 2026,01:50 PM IST

- கலைவாணி ராமு 


சிவராத்திரி திருவருள்

நாயகனே.....

சிங்கார வேலனின் தந்தையே....

சிவ ஞானத்தின் மூலம்

சிந்தை தெளிய வைப்பவனே..

சடை முடி உடையோனே..

சங்கடங்களை தீர்ப்பவனே....


கால காலனே...

கறை கண்டனே...

சுடுகாட்டுச் சாம்பலை

சொர்க்கமாய் பூசியவனே!




நந்தி வாகனனே...

நர்த்தன நடனம் புரிபவனே....

தன் உடலின் சரிபாதியை உமையாளுக்கு

கொடுத்து அர்த்தநாரீஸ்வரனாய் அருள்பவனே....


தலையில் கங்கை தாங்கியவனே...

பிறை நிலவை சூடிய

பித்தனே... பேயனுக்கும்

முத்தி தரும் பெருமானே!


அண்டங்களை ஆள்பவனே...

சாம்பலின் வாசத்தில் சந்தோஷம் கொள்பவனே...

வில்வ மாலையில் விஸ்வரூப தரிசனம் கொடுப்பவரே.....

பஞ்சாட்சர மந்திரத்தில் பவனி வருபவரே...


கண்ணுக்கும் எட்டாத

ஜோதிப் பிழம்பாய் நின்று

அகிலத்தை ஆட்டும்

ஆதி அந்தம் அற்றவனே!


கோபக் கனல் கொண்ட இவர்

ஆனந்த கூத்தாடும் ராத்திரி - சிவராத்திரி


இந்நாளில் சிவனை வணங்கி

சிவ முக்தி அடைவோம்...


ஓம் நமசிவாய!

சிவாய நமக!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்