சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!

Feb 15, 2026,01:50 PM IST

- கலைவாணி ராமு 


சிவராத்திரி திருவருள்

நாயகனே.....

சிங்கார வேலனின் தந்தையே....

சிவ ஞானத்தின் மூலம்

சிந்தை தெளிய வைப்பவனே..

சடை முடி உடையோனே..

சங்கடங்களை தீர்ப்பவனே....


கால காலனே...

கறை கண்டனே...

சுடுகாட்டுச் சாம்பலை

சொர்க்கமாய் பூசியவனே!




நந்தி வாகனனே...

நர்த்தன நடனம் புரிபவனே....

தன் உடலின் சரிபாதியை உமையாளுக்கு

கொடுத்து அர்த்தநாரீஸ்வரனாய் அருள்பவனே....


தலையில் கங்கை தாங்கியவனே...

பிறை நிலவை சூடிய

பித்தனே... பேயனுக்கும்

முத்தி தரும் பெருமானே!


அண்டங்களை ஆள்பவனே...

சாம்பலின் வாசத்தில் சந்தோஷம் கொள்பவனே...

வில்வ மாலையில் விஸ்வரூப தரிசனம் கொடுப்பவரே.....

பஞ்சாட்சர மந்திரத்தில் பவனி வருபவரே...


கண்ணுக்கும் எட்டாத

ஜோதிப் பிழம்பாய் நின்று

அகிலத்தை ஆட்டும்

ஆதி அந்தம் அற்றவனே!


கோபக் கனல் கொண்ட இவர்

ஆனந்த கூத்தாடும் ராத்திரி - சிவராத்திரி


இந்நாளில் சிவனை வணங்கி

சிவ முக்தி அடைவோம்...


ஓம் நமசிவாய!

சிவாய நமக!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்

news

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை

news

தேடி தேடி அலையும் மனசு நொந்து தொலையும்!

news

Poem: இருமனம் இணைந்த காவியம்

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்