Cyclone Fengal.. வங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்தம்.. ஃபெஞ்சல் புயலாக மாறியது.. நாளை கரையைக் கடக்கும்

Nov 29, 2024,05:17 PM IST

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக மாறியுள்ளது. நாளை இது மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கவுள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெஞ்சல் எனவும் பெயரிடப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடித்திருந்ததால் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. 




இதனால் மழை குறைந்து பலத்த காற்று வீசி வந்தது. மேலும், வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழந்து கரையைக் கடக்கும் என நேற்று அறிவிப்பு வெளியானது. இருப்பினும் இன்றும் நாளையும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற இருப்பதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தற்போது இது புயலாக மாறியுள்ளது. ஃபெஞ்சல் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா வைத்த பெயர் இது.


இது தொடர்ந்து புயலாகவே வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், மற்றும் புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில்  மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மதியம் கரையை கடக்க கூடும். புயல் கரையைக் கடக்கும் போது 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீச கூடும். இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


நவம்பர் 23ம் தேதி இந்த புயல் சின்னமானது வங்கக் கடலில் உருவாகி கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு புயலாக அவதாரம் எடுத்துள்ளது. வங்கக் கடலில் இந்த ஆண்டு உருவான 3வது புயலாகும் இது. அதேசமயம், வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் உருவான 2வது புயல் இது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?

news

என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!

news

PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு

news

கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!

news

Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!

news

ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்

news

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!

news

தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்