சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்தமாக வலுவடைந்து அதற்கு அடுத்த நாள், அதாவது மே 25ஆம் தேதி புயலாக உருவாகிறது. இந்தப் புயலுக்கு ரெமல் என பெயரிடப்படவுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. விரைவில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மே 25ஆம் தேதி புயலாக மாறி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 26ஆம் தேதி மாலையில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை அருகே தீவிரப்புயலாக வலுப்பெறும். ஓமன் நாடு பரிந்துரைப்படி, இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்படும். இந்த வருடத்தில் வங்கக் கடலில் உருவாகும் முதல் புயல் இதுவே.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், நாளை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இன்று மிக கன மழை:
நீலகிரி,கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை:
ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}