Cyclone Remal.. நாளை மறுநாள்.. வங்கக் கடலில் உருவாகிறது ரெமல் புயல்.. வானிலை மையம் அறிவிப்பு!

May 23, 2024,09:53 PM IST

சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்தமாக வலுவடைந்து அதற்கு அடுத்த நாள், அதாவது மே 25ஆம் தேதி புயலாக உருவாகிறது. இந்தப் புயலுக்கு ரெமல் என பெயரிடப்படவுள்ளது.

 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. விரைவில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக உருவாக கூடும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மே 25ஆம் தேதி புயலாக மாறி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 26ஆம் தேதி மாலையில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை அருகே தீவிரப்புயலாக வலுப்பெறும். ஓமன் நாடு பரிந்துரைப்படி, இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்படும்.  இந்த வருடத்தில் வங்கக் கடலில் உருவாகும் முதல் புயல் இதுவே.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், நாளை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 


இன்று மிக கன மழை:


நீலகிரி,கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இன்று கனமழை:


ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கனமழை:


திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்