சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்தமாக வலுவடைந்து அதற்கு அடுத்த நாள், அதாவது மே 25ஆம் தேதி புயலாக உருவாகிறது. இந்தப் புயலுக்கு ரெமல் என பெயரிடப்படவுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. விரைவில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மே 25ஆம் தேதி புயலாக மாறி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 26ஆம் தேதி மாலையில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை அருகே தீவிரப்புயலாக வலுப்பெறும். ஓமன் நாடு பரிந்துரைப்படி, இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்படும். இந்த வருடத்தில் வங்கக் கடலில் உருவாகும் முதல் புயல் இதுவே.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், நாளை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இன்று மிக கன மழை:
நீலகிரி,கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழை:
ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}