மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் வஹிதா ரஹ்மான். இவருக்கு வயது 85. 1955ம் ஆண்டு ரோஜூலு மராயி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
அதன் பின்னர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் எம்ஜிஆர் நடித்த அலிபாபவும் 40 திருடர்கள் என்ற திரைப்படத்தில் நடித்தவர். கடைசியாக கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தில் கமலுக்குத் தாயாக நடித்திருந்தார்.
தேசிய திரைப்பட விருது, பிலிம்ஃபேர், பிலிம்ஃபேர் லைஃப் டைம் சாதனை விருது, என்டிஆர் தேசிய விருது, பத்மஸ்ரீ ஆகிய பல விருதுகளை பெற்றுள்ளார். தற்பொழுது , 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}