மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் வஹிதா ரஹ்மான். இவருக்கு வயது 85. 1955ம் ஆண்டு ரோஜூலு மராயி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
அதன் பின்னர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் எம்ஜிஆர் நடித்த அலிபாபவும் 40 திருடர்கள் என்ற திரைப்படத்தில் நடித்தவர். கடைசியாக கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தில் கமலுக்குத் தாயாக நடித்திருந்தார்.
தேசிய திரைப்பட விருது, பிலிம்ஃபேர், பிலிம்ஃபேர் லைஃப் டைம் சாதனை விருது, என்டிஆர் தேசிய விருது, பத்மஸ்ரீ ஆகிய பல விருதுகளை பெற்றுள்ளார். தற்பொழுது , 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}