சென்னை: ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்த டியர் படம் கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி வெளியான நிலையில், இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனால் டியர் படக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நட்மெக் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டியர். இதில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, நந்தினி மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குறட்டை விடுவதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறட்டையால் திருமண வாழ்க்கையில் எப்படியெல்லாம் குழப்பம் வருகிறது, சண்டை வருகிறது, அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும். மேலும் இப்படத்தின் கதைக்களம், கதை சொல்லும் பாணி, நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டியர் திரைப்படம் கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்களின் தொடர்ந்த ஆதரவால் இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வெள்ளி நாயகன் வெள்ளி நாயகி என போற்றப்படும், நடிகர் ஜீவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முதலாக இணைந்து நடித்திருப்பது படத்தின் வெற்றிக்கு காரணம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம்.
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}