சென்னை: ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்த டியர் படம் கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி வெளியான நிலையில், இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனால் டியர் படக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நட்மெக் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டியர். இதில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, நந்தினி மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குறட்டை விடுவதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறட்டையால் திருமண வாழ்க்கையில் எப்படியெல்லாம் குழப்பம் வருகிறது, சண்டை வருகிறது, அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும். மேலும் இப்படத்தின் கதைக்களம், கதை சொல்லும் பாணி, நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டியர் திரைப்படம் கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்களின் தொடர்ந்த ஆதரவால் இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வெள்ளி நாயகன் வெள்ளி நாயகி என போற்றப்படும், நடிகர் ஜீவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முதலாக இணைந்து நடித்திருப்பது படத்தின் வெற்றிக்கு காரணம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}