- ஔவை அ.ர.தீபாரவி
படபடவென பறவைகள் ஆங்கே பறந்த வண்ணம்..
சிட்டுக்குருவிகள் தன் சிற்றலகால் ஒன்றையொன்று மோதிய வண்ணம்..
சத்தமேதுமில்லாமல் பட்டாம்பூச்சிகள்
அழகாகப் பறந்த வண்ணம்
சில்லென்ற காற்று தென்றலாய் ஒரு புறம் வருடிச் செல்ல..
சலசலவென ஆங்கே நீரோடைச்சத்தம்
அழகாக அனுமதியேதுமின்றிக் காது நுழைய..

திரும்பி ரசிக்கும் வேளையில்
எதிர்பாராமல்
சின்ன மஞ்சள் வண்ணத்துப் பூச்சி என் தோளமர..
ஆடாமல் அசையாமல் அவள்
அமரவே என் நிலை..
சிறிது நேரம் அப்படியே அழகாகச் சிறகை விரித்தும் குவித்தும் அவள்..
அதனைக் கண்ட என் விழிகளோ
ஆர்வத்தில் சிமிட்டிய வண்ணம்..
அழகான அமைதியான இடம் நானும் ஏட்டுடன் மரத்தடியில்..
காட்சியை இதோ
வரிகளோடு நான் மட்டுமா நீங்களும் தற்போது சோலைக்குள் இன்று..!
(கவித்துளியின் ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
தமிழை நேசிப்போர்க்கும்.. சுவாசிப்போர்க்கும்.. யோசிப்போர்க்கும்.. தென் தமிழ்!
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
சிபிஎஸ்இ மதிப்பெண் சரிபார்ப்பு, மறுமதிப்பீட்டுக்கு ஆதார் கட்டாயம்
புலி பட விவகாரம் : முதல்வர் விஜய்க்கு எதிரான மனு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி
Tamil Short Story: மௌனத்தின் மரணம்
{{comments.comment}}