விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

Apr 23, 2026,04:49 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


விதைக்குள் 

காடிருக்கு

அந்தக் 

கூட்டில்

ஒளிந்திருக்கு


விதைத்தவர்

உறங்கினாலும்  

இங்கே

விதைகள் 

உறங்கிடுமோ?


உயிருக்கு

வழியாக

உயிர்வளி

தருவது

மரந்தானே




நா 

ருசிக்கப் 

பழங்களைத்  

தருவதும் 

அதுதானே


மண்ணுக்கும்

விண்ணுக்கும்

பாலமமைக்க

மழையைத்

தருகுதே


மானிடர்க்கு

என்றும்

மருந்தும்

விருந்தும்

ஆகிறதே


இளைப்பாற

நிழலும்

மழலை

மகிழ

ஊஞ்சலுமாகுதே


பல்லுயிர்க்கும் 

புகலிடமாம்

சரணாலயமாம்

மரங்கள் 

வரங்களாம்


உணவின்றிப்

பலநாள்கள் 

நீரின்றி 

சிலநாள்கள்

வாழலாம்


ஆனால் 

காற்றின்றி

நொடியேனும்

உயிர்வாழ்தல்

இயலுமோ?


(கவித்துளி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்