- ஔவை அ.ர.தீபாரவி
விதைக்குள்
காடிருக்கு
அந்தக்
கூட்டில்
ஒளிந்திருக்கு
விதைத்தவர்
உறங்கினாலும்
இங்கே
விதைகள்
உறங்கிடுமோ?
உயிருக்கு
வழியாக
உயிர்வளி
தருவது
மரந்தானே

நா
ருசிக்கப்
பழங்களைத்
தருவதும்
அதுதானே
மண்ணுக்கும்
விண்ணுக்கும்
பாலமமைக்க
மழையைத்
தருகுதே
மானிடர்க்கு
என்றும்
மருந்தும்
விருந்தும்
ஆகிறதே
இளைப்பாற
நிழலும்
மழலை
மகிழ
ஊஞ்சலுமாகுதே
பல்லுயிர்க்கும்
புகலிடமாம்
சரணாலயமாம்
மரங்கள்
வரங்களாம்
உணவின்றிப்
பலநாள்கள்
நீரின்றி
சிலநாள்கள்
வாழலாம்
உயிர்வாழ்தல்
இயலுமோ?
(கவித்துளி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
Tamil Nadu Assembly elections: அனல் பறக்க முடிந்த சட்டசபைத் தேர்தல்.. வரலாறு காணாத வாக்குப் பதிவு!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}