- ஔவை அ.ர.தீபாரவி
விதைக்குள்
காடிருக்கு
அந்தக்
கூட்டில்
ஒளிந்திருக்கு
விதைத்தவர்
உறங்கினாலும்
இங்கே
விதைகள்
உறங்கிடுமோ?
உயிருக்கு
வழியாக
உயிர்வளி
தருவது
மரந்தானே

நா
ருசிக்கப்
பழங்களைத்
தருவதும்
அதுதானே
மண்ணுக்கும்
விண்ணுக்கும்
பாலமமைக்க
மழையைத்
தருகுதே
மானிடர்க்கு
என்றும்
மருந்தும்
விருந்தும்
ஆகிறதே
இளைப்பாற
நிழலும்
மழலை
மகிழ
ஊஞ்சலுமாகுதே
பல்லுயிர்க்கும்
புகலிடமாம்
சரணாலயமாம்
மரங்கள்
வரங்களாம்
உணவின்றிப்
பலநாள்கள்
நீரின்றி
சிலநாள்கள்
வாழலாம்
உயிர்வாழ்தல்
இயலுமோ?
(கவித்துளி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}