சென்னை: தீபாவளி திருநாளான இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது வட கிழக்குப் பருவ மழை சீசன் என்பதால் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 15 மாவட்டங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்:

மதுரைக்கு கன மழை எச்சரிக்கை
இன்று தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
நவம்பர் 1ம் தேதியான நாளை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று பெய்தது போல இன்று திடீர் கன மழை பெய்ய வாய்ப்பில்லை என்று ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}