சென்னை: தீபாவளி திருநாளான இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது வட கிழக்குப் பருவ மழை சீசன் என்பதால் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 15 மாவட்டங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்:
மதுரைக்கு கன மழை எச்சரிக்கை
இன்று தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
நவம்பர் 1ம் தேதியான நாளை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று பெய்தது போல இன்று திடீர் கன மழை பெய்ய வாய்ப்பில்லை என்று ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
{{comments.comment}}