சென்னை: தீபாவளி திருநாளான இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது வட கிழக்குப் பருவ மழை சீசன் என்பதால் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 15 மாவட்டங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்:

மதுரைக்கு கன மழை எச்சரிக்கை
இன்று தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
நவம்பர் 1ம் தேதியான நாளை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று பெய்தது போல இன்று திடீர் கன மழை பெய்ய வாய்ப்பில்லை என்று ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}