சென்னை: தீபாவளி திருநாளான இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. புதுச்சேரியிலும், காரைக்காலிலும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது வட கிழக்குப் பருவ மழை சீசன் என்பதால் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 15 மாவட்டங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்:

மதுரைக்கு கன மழை எச்சரிக்கை
இன்று தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
நவம்பர் 1ம் தேதியான நாளை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று பெய்தது போல இன்று திடீர் கன மழை பெய்ய வாய்ப்பில்லை என்று ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}