- ஸ்வர்ணலட்சுமி
தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் செஞ்சா மட்டும் போதுமா.. சுறுசுறுன்னு மொறு மொறுப்பா காரமும் பண்ணனும் இல்லையா.. அதுக்காகத்தான் ஒரு சூப்பரான ரெசிப்பியுடன் வந்துள்ளோம்.
இட்லி அரிசி வைத்து பூண்டு ஓமம் ஓட்டு பக்கடா செய்வோம் வாருங்கள்
பூண்டு ஓமம் ஓட்டு பக்கடா:
1.இட்லி அரிசி - 3 டம்ளர்
2. வறுகடலை- (பொட்டுக்கடலை) 2 டம்ளர்.
3. பூண்டு,வரமிளகாய்- தலா 10. (காரம் தேவைக்கு ஏற்ப )
4. ஓமம், எள்ளு தலா ஒரு ஸ்பூன்.
5. கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் - 1 லிட்டர். (குறிப்பு : செக்கு எண்ணெய் பயன்படுத்தினால் மிகவும் ருசியாக இருக்கும்.)
செய்முறை:

1.இட்லி அரிசியை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பிறகு அதனை கிரைண்டரில் நைசாக ஆட்டவும்.
3. வறுகடலை (பொட்டுக்கடலை) மிக்ஸியில் நன்றாக அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். இட்லி அரிசி மாவில் சேர்க்கவும்.
4. பூண்டு வர மிளகாய் மிக்ஸியில் நன்றாக அரைத்து அந்தச் சாறை மாவில் சேர்க்கவும்.
5. உப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்.
6. ஓமம் எள்ளு தலா ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.
7. ஒரு குழி கரண்டி எண்ணெயை நன்றாக காய வைத்து மாவில் ஊற்றவும்.
8. இவை அனைத்தையும் நன்றாக பிசையவும்.
9. அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு ஏறி காய்ந்ததும்,
10. முறுக்கு அச்சில் போட்டு மாவை சிறிது சிறிதாக பிழிந்து பக்கடாவை எண்ணெயில் பொரித்தெடுக்கவும் .
11. சூடு ஆறிய பிறகு காற்று புகாத ஒரு ஸ்டீல் டப்பாவில் வைக்கவும்.
12. மொறு மொறு என்று சூப்பர் கிரிஸ்பியான பூண்டு ஓட்டுபக்கடா ரெடி.
13. . இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்வீட் &காரம் ரெடி. எவ்வளவுதான் கடைகளில் வாங்கினாலும் நாம் வீட்டில் செய்வது தனி ருசி தான். நமக்கும் மிகவும் சந்தோஷம் அளிக்கும்.
14. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இது போன்ற ருசியான சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}