- ஸ்வர்ணலட்சுமி
தீபாவளி என்றாலே ஸ்வீட் தான் அனைவரின் நினைவிலும் வரும். சட்டென நான்கு பொருட்கள் வைத்து ஒரு ஸ்வீட் - காஜு கத்திலி. முந்திரிப் பருப்பை வைத்து செய்யலாம்.வாருங்கள்.
கிச்சனுக்குள் போகலாம் பிரண்ட்ஸ்..!
தேவையான பொருட்கள்:
1.முந்திரிப் பருப்பு - 2 கப்
2. சர்க்கரை - 1 கப்
3. பால் பவுடர் -1/2 கப்
4. ஏலக்காய் -2
5. தண்ணீர் அரை கப்
செய்முறை:

1. முதலில் முந்திரியை நன்றாக துடைத்து விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போடவும், அதனுடன் அரை கப் (மில்க் பவுடர்) பால் பவுடர், ஏலக்காய் இரண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
2. அரைத்த பவுடரை சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
3. பிறகு ஒரு அடி கனமான வாணலியில் ஒரு கப் சர்க்கரை போடவும்.
4. அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கம்பி பதம் வரும் வரை சர்க்கரை பாகு காய்ச்சவும்.
5. பிறகு அடுப்பை சிமிலியே இருக்குமாறு வைக்கவும்.
6. சலித்து வைத்த முந்திரி பால் பவுடர் கலவையை இதனுள் சேர்த்து நன்றாக கிளறவும்.
7. இது நன்றாக உருண்டு திரண்டு வரும். சப்பாத்தி மாவு போல் திரண்டு வரும். உடனே அடுப்பை அணைக்கவும்.
8. ஒரு பாலிதீன் கவரில் இதனைப் போட்டு நன்றாக உருட்டவும்.
9. பாலித்தீன் கவரில் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு பாலத்தின் கவர் வைக்கவும்.. பிறகு சப்பாத்தி கட்டையால் இதனை மெல்லியதாக தேய்க்கவும்.
10. மேலுள்ள கவரை எடுத்து நமக்கு தேவையான அளவு கத்தியால் டைமண்ட் அல்லது சதுர வடிவத்தில் கட் செய்யவும்.
11. சிறிது நேரம் சூடு ஆறவிடவும்.
12. சூப்பரான அனைவருக்கும் பிடித்தமான காஜுகத்திலி ரெடி.
13. தீபாவளிக்கு சீக்கிரமாக இந்த காஜு கத்திலி செய்யலாம் இல்லையா?....
தீபாவளிக்கு காஜு கத்திலி செய்து அசத்துங்க ஃபிரண்ட்ஸ்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}