- ஸ்வர்ணலட்சுமி
தீபாவளி என்றாலே ஸ்வீட் தான் அனைவரின் நினைவிலும் வரும். சட்டென நான்கு பொருட்கள் வைத்து ஒரு ஸ்வீட் - காஜு கத்திலி. முந்திரிப் பருப்பை வைத்து செய்யலாம்.வாருங்கள்.
கிச்சனுக்குள் போகலாம் பிரண்ட்ஸ்..!
தேவையான பொருட்கள்:
1.முந்திரிப் பருப்பு - 2 கப்
2. சர்க்கரை - 1 கப்
3. பால் பவுடர் -1/2 கப்
4. ஏலக்காய் -2
5. தண்ணீர் அரை கப்
செய்முறை:

1. முதலில் முந்திரியை நன்றாக துடைத்து விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போடவும், அதனுடன் அரை கப் (மில்க் பவுடர்) பால் பவுடர், ஏலக்காய் இரண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
2. அரைத்த பவுடரை சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
3. பிறகு ஒரு அடி கனமான வாணலியில் ஒரு கப் சர்க்கரை போடவும்.
4. அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கம்பி பதம் வரும் வரை சர்க்கரை பாகு காய்ச்சவும்.
5. பிறகு அடுப்பை சிமிலியே இருக்குமாறு வைக்கவும்.
6. சலித்து வைத்த முந்திரி பால் பவுடர் கலவையை இதனுள் சேர்த்து நன்றாக கிளறவும்.
7. இது நன்றாக உருண்டு திரண்டு வரும். சப்பாத்தி மாவு போல் திரண்டு வரும். உடனே அடுப்பை அணைக்கவும்.
8. ஒரு பாலிதீன் கவரில் இதனைப் போட்டு நன்றாக உருட்டவும்.
9. பாலித்தீன் கவரில் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு பாலத்தின் கவர் வைக்கவும்.. பிறகு சப்பாத்தி கட்டையால் இதனை மெல்லியதாக தேய்க்கவும்.
10. மேலுள்ள கவரை எடுத்து நமக்கு தேவையான அளவு கத்தியால் டைமண்ட் அல்லது சதுர வடிவத்தில் கட் செய்யவும்.
11. சிறிது நேரம் சூடு ஆறவிடவும்.
12. சூப்பரான அனைவருக்கும் பிடித்தமான காஜுகத்திலி ரெடி.
13. தீபாவளிக்கு சீக்கிரமாக இந்த காஜு கத்திலி செய்யலாம் இல்லையா?....
தீபாவளிக்கு காஜு கத்திலி செய்து அசத்துங்க ஃபிரண்ட்ஸ்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}