டெல்லி: டெல்லியில் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த 18 வயது இளைஞர் மீது ஏர் கண்டிஷனர் தலையில் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியின் டோரிவாலா பகுதியில் வசித்து வந்தவர் ஜிதேஷ். இவருக்கு வயது 18. அதே பகுதியில் படேல் நகரைச் சேர்ந்தவர் பிரான்சு. இவருக்கு வயது 17. இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மாலை 6.30 மணி அளவில் வீட்டுக்கு வெளியே பேசிக் கொண்டிருந்தனர். ஜிதேஷ் தனது ஸ்கூட்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரண்டாவது மாடியில் இருந்த ஏர் கண்டிஷனரின் அவுட்லட் மெஷின் எதிர்பாராத விதமாக சரிந்து ஜிதேஷ் மீது விழுந்தது.
இதில் ஜிதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரான்சுவுக்கும் இதில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஏர் கண்டிஷனர் தலையில் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் இந்த விபத்து யாருடைய அஜாக்கிரதையால் நிகழ்ந்தது என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது மாடியில் இருந்து ஏர்கண்டிஷனர் விழுந்து ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காண்போரை நெஞ்சை நெகிழச் செய்கிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}